முப்பதே வயதான சங்கீதாவிற்கு உயிருடன் இருக்கும் நான்கு கணவர்கள். அதுவும் நான்காவது கணவன் தினேஷுக்கு இருபத்தேழு வயதுதான். சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொன்றுவிட்டு அவர்களின் உடமைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் சங்கீதாவும் தினேஷும் கைதாகியிருக்கிறார்கள். ஊடகங்களில் சுடச் சுடச் செய்தி பறக்கிறது. இது ஆறுவதற்கு இன்னும் ஒருமாதம் கூட ஆகலாம்.
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் 1,456 பில்லியன் டாலர்கள். அதாவது 72,800 கோடி இந்திய ரூபாய். இது Black money in Swiss Banks – Swiss Banking Association Report-2006ல் பெருமையாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள். இப்படி மூன்றாம் உலகநாடுகளில் கொள்ளயடிக்கப்பட்ட பணம் ஸ்விஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய்கள் முடங்கிக் கிடக்கிறது. வங்கித் தொழில் தர்மத்தை காப்பாற்றுவதாக கூறி கொள்ளையர்களை அடையாளம் காட்ட மறுக்கும் ஸ்விஸ் வங்கிகளின் தொழில் தர்மமானது, கூலிப்படையின் தலைவன் கொலை செய்ய ஏவல் செய்தவனை அடையாளம் காட்ட மறுக்கும் தர்மத்திற்கு ஒப்பானது! இப்படிப்பட்ட வங்கிகள் செயல்பாட்டு அடிப்படையே உலக சமூகதர்மத்தை மீறிய செயலாகும். ஆனாலும் இவைகள் பகிரங்கமாக இயங்குகின்றன. இப்படிப்பட்ட அமைப்புகளை முடக்குவதற்கு உலக அமைப்புகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே ஏன்? நிதி மூலதனத்தின் உலகமயமாகக்கலுக்கு உகந்ததாக தற்போதைய ஏற்பாடு இருக்கிறது என்பதால்தானே! இவைகளைப் பற்றிய செய்திகளும் ஏற்பாடுகளும் ஏன் ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? NDTV, CNN-IBN ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரு வாரத்திற்கு ஸ்விஸ் வங்கிகளின் இருத்தலுக்கான அதர்மத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பினால் ஸ்விஸ் வங்கிகள் தாக்குபிடித்து நிற்கமுடியுமா? நமது நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் மிக முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட, ஸ்விஸ் வங்கிகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்தான் மிகப் பெரியது. இதை ஏன் பாகிஸ்தானை எதிர்த்து கூக்குரலிடும் அமைப்புகள் கையிலெடுக்கவில்லை? இந்த அமைப்புகளுக்கும், ஸ்விஸ் வங்கிகளுக்கும் உள்ள தொடர்புகள் என்ன? போன்றவைகள் சாதாரண இந்திய குடிமகனை வாட்டி வதைக்கும் கேள்விகள்.
ஜனவரி 1, 2009, இனிய புத்தாண்டாக உலக மக்களுக்கு விடிந்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கோ துயரமான ஆண்டாக மலர்ந்து விட்டது. ஏனென்றால் அதன் மத்திய அலுவலகத்திலிருந்து 2.6 கோடி ரூபாய் பணம் காணாமல் போய்விட்டது. கட்சியின் உள் நிர்வாகிகள்தான் இதை திருடியிருக்க முடியும். அதன் முக்கிய நிர்வாகியான டாண்டன் மீது சந்தேக நிழல் படிய ஆரம்பித்ததது, அவரது பதவியும் பறிக்கப்பட்டது. எனினும், ஏன் பாஜக இதை ஒரு புகாராக காவல்துறையினரிடம் எடுத்துச் செல்லவில்லை? ஏனென்றால் இந்த 2.6 கோடி ரூபாய் என்பது கள்ளத்தனமாக பெறப்பட்ட பணம்; கணக்கில் வராத பணம். எனவே இவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது என்ற கொண்டாட்டம் திருடியவனுக்கு வந்துவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என்று முழித்த பாஜக தலைமை தனியார் உளவு அமைப்பினரை அணுகி இதை விசாரித்துத் தருமாறு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. பிறகு என்ன நடக்கும்? தனியார் உளவுத் துறை தன்னுடைய "திறமை" யை பயன்படுத்தி திருடனைக் கண்டுபிடித்து பாஜக தலைமையிடம் கூறிவிடும். பாஜக தலைமையும் தனியார் காவல்துறையை அணுகி திருடனிடமிருந்து பணத்தை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளும். 2.6 கோடியை முழுங்கிய திருடனும் சும்மா இருப்பானா? எல்லாம் தனியார் மயமான இந்த உலகில் அதே தனியார் உளவுத்துறையிடம் அணுகி வெட்ட வேண்டியதை வெட்டி திருட்டை ஜீரணித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைப்பான். கடைசியில் யாரோ ஒருவன் மாட்டிக் கொண்டு பாஜக அமர்த்தும் தனியார் கூலிப்படையால் கொல்லப்படுவான்.
நிதிமூலதனத்தின் உலகமயமாக்கலால் உருவான ஒழுக்கக் கேடுகள், சட்ட மீறல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு இயந்திரத்தால் முடியவில்லை. ஓழுக்கத்தின் அடிப்படையில்உருவாக்கப்பட்ட சட்டங்களால் ஒழுக்க மீறிலின் ஒழுக்கமீறலை எதிர்கொள்ள முடியாத முரண்பாடு உருவாகிறது. இந்த முரண்பாட்டின் உபவிளைவுதான் தனியார் உளவு நிறுவனங்கள், தனியார் காவல் அமைப்புகள், தனியார்மயமாக்கப்பட்ட தண்டிக்கும் அமைப்புகளான கூலிப்படைகள். அரசாங்கத்தையே நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் பாஜக போன்ற அமைப்பானது தன்னுடைய பிரச்சனைகளுக்காக இப்படி தனியார்களை அணுகுவது என்பது 'தனியார்'மய சீக்குப்பிடித்து அலைந்து கொண்டிருக்கும் அமைப்பிற்கு ஆச்சரியமான விஷயமல்ல.
காவல் அமைப்பில் தனியார்மயம் ஏற்படுத்திய தாக்கத்தை மனசாட்சியுடன் அலச வேண்டிய நமது சமூகத்தில் என்ன நடந்து வருகிறது? இதன் மோசமான விளைவுகளை அம்பலப்படுத்துவதற்கு பதில், இதன் உட்செய்தியை வெளியே தெரியாமல் தடுக்கும் குவியல் அரசியல்தான் (Politics of Dumping), சங்கீதா என்ற இளம் பெண்ணிற்கு நான்கு கணவர்கள் என்ற செய்தி. இனி எப்படி இந்த நான்கு பேரிடம் அவளுக்கு தொடர்பு ஏற்பட்டது. நான்கு பேரிடம் அவளது உறவுகள் பற்றிய அலசல்கள் ஊடகங்களால் கொட்டப்பட்டு, சாதாரண மக்களை எச்சில் ஒழுக 'சுவாரஸ்யமாக' ரசிக்க வைத்து, சங்கீத குழாயால் எலிகளை இழுத்துக் கொண்டு போய் தண்ணீரில் மூழ்கடித்த (Pide Piper of Hamilin) வேலையை குவியலரசியல் நடத்தும். இவளின் வாழ்க்கை ஒரு சினிமாப் படமாக கூட வெளிவரலாம்.
சங்கீதா என்ற பெண் ஒரு தனியார் உளவு நிறுவனத்தில் வேலை செய்து வந்தவள், கொல்லப்பட்ட சைதாப்பேட்டை தம்பதியினர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். சங்கீதா, கொல்லப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அவளது பணிநிமித்தமாக பலமுறை சென்றிருக்கிறாள் என்ற உண்மையின் மேல் அவளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய ‘சுவாரஸ்யமான‘ செய்திகளை கொட்டி மூடும் குவியலரசியல் நடந்து வருகிறது. தனியார் காவல் அமைப்பினால் நமது சமூகத்திற்கு ஏற்படும் கேடுகள் சைதாப்பேட்டை சம்பவம் மூலம் உணர்த்தப்பட போவதில்லை. சம்பந்தப்பட்ட தனியார் உளவு நிறுவனத்தின் பெயரைக் கூட பத்திரிக்கைகள் வெளியிடாமல் ‘கண்ணியம்‘ காத்து வருகிறார்கள். அண்ணா சாலையில் இயங்கும் ஒரு தனியார் உளவு நிறுவனம் என்ற செய்தியை வைத்து வாசகன் தன்னுடை பொது அறிவை பயன்படுத்தி Globus Detective Agency என்ற அமைப்பு ஒன்றுதான் அண்ணாசாலையில் இயங்குகிறது என்ற முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுதான் குவியலரசியலின் வெற்றி,
January 7, 2009
December 27, 2008
ஒரு புதன்கிழமை
ஒரு புதன்கிழமை. இது 3 மாத்திற்கு முன் வெளிவந்த இந்தித் திரைப்படம். தற்போது இதன் இயக்குனர் நீரஜ்பாண்டேக்கு இப்படத்தின் மூலம் இயக்குனர் சாந்தாராம் விருது கிடைத்திருக்கிறது. இதன் கரு தீவிரவாதம் பற்றியது. இதன் வடிவம் தமிழின் ‘இந்தியன்‘ திரைப்படத்தையும், ஜப்பானின் ‘புல்லட் ட்ரெயின்‘ படத்தையும் கலந்த ஒரு மசாலா வடிவம். சில மசாலாப் படங்கள் மக்கள் மனதை கவ்விப்பிடித்து, பிற்போக்கான அல்லது மேம்போக்கான பார்வையை மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்கும் திறனுடையவை. இந்த ரகங்களில் தமிழில் வந்த ‘ஜென்டில்மேன்‘ படத்தை உதாரணமாகக் கூறலாம். நமது நாட்டில் தொழில்கல்வியும், மருத்துவ கல்வியும் தனியார்மயப்படுத்தி தெருக்களில் தொழிற்கல்வி பட்டங்கள் கூவி விற்காத குறையாக வியாபாரப்படுத்தப்பட்ட கல்விமுறையை திணித்தது உலகமயமாக்கல். ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் வாயிலாக, இடஒதுக்கீட்டின் மூலம், திறமைசாலிக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், இந்த கொள்கையை அமல்படுத்தும் முறை மோசம் என்றும் கூறி கல்வியை வியாபாரமயமாக்கி சமூகத்தை காயப்படுத்திய உலகமயமாக்கல் கொள்கையை மூடி மறைப்பதோடல்லாமல் தனியார்மயமானால் இடஒதுக்கீடு இருக்காது; திறமைசாலிகள் படிக்க முடியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இப்படம். அதுவும் உலகமயமாக்கல் அமல்படுத்தித் துவங்கிய காலகட்டத்தில் வந்தது. இதன் வரிசையில் தற்போது வந்தததுதான் ‘ஒரு புதன்கிழமை‘ திரைப்படம்.
இப்படத்தின் சிறப்பம்சம்: இதில் காதல் கிடையாது, பாடல்கள் கிடையாது, சண்டை கிடையாது. எனவே இது மசாலப்படமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அனுபம் கேர் மற்றும் நஸிருதீன் ஷா ஆகிய நடிகர்களின் பாத்திரமே பிரதானமானது. ஓய்வு பெற்ற மும்பய் நகர போலீஸ் கமிஷன் தன்னுடைய கடைசி நாள் பணியின் அனுபவம் பற்றி கூறுவதாக கதையைத் துவங்குகிறார். பெரியவர் ஒருவர் (நஸிருதீன் ஷா) மும்பய் போலீஸ் கமிஷனர் (அனுபம் கேர்) அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் தன்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டதாக கூறி புகார் கொடுக்கச் சென்று அங்கு வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்புகிறார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டு, நவீனக் கருவிகளின் துணையுடன் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு தான் மும்பயில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு முக்கிய முஸ்லீம் தீவிரவாதிகளை விடுவிக்க முன்வந்தால், குண்டு வைத்த இடங்களை சொல்வதாகவும் கூறுகிறார். அசட்டை செய்த போலீஸ் கமிஷனரிடம் ‘நான் குண்டு வைத்ததை நம்பவில்லை என்றால், உங்கள் அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறேன்; அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறார். கமிஷனரிடம் பேசும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டின் சிம்கார்டை பயன்படுத்துவதால் இவருடைய இடத்தை மோப்பம் பிடிப்பதற்கு காவல்துறைக்கு சிரமப்படுகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி நபரை தொடர்பு கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றால், உங்களுக்கு நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டிய பரபரப்பான செய்தி கிடைக்கும் என்று கூறவே, அத்தொலைக்காட்சியும் உபகரணங்களுடன் அங்கு சென்று நேரடி ஒளிபரப்பை துவங்குகிறது. மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும் பெரியவருக்கு அங்கு நடப்பது தொலைக்காட்சிமூலம் தெரியவர, தன்னுடைய அடுத்த காயை நகர்த்துகிறார் பெரியவர்.
இப்பொழுது தான் குறிப்பிடும் நான் முஸ்லீம் தீவிரவாதிகளை தான் சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து விட்டால், குண்டு வைக்கப்பட்டிருக்கும் இடங்களை கூறுவதாக கூறுகிறார். கமிஷனரும் முதலமைச்சரும் கூடி பேசி முடிவெடுத்து நான்கு தீவிரவாதிகளை விடுவிப்பதாகவும், பெரியவர் சொல்லும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதாகவும் உறுதியளிக்கின்றனர். இதற்கிடையில், பெரியவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அவரை கண்டுபிடிக்க ஒரு கணிணி சங்கேத நிபுணரை (Hacker) அழைத்து பணியில் ஈடுபடுத்துகின்றனர். ஆரம்பத்தில் புகார் வாங்கிய காவலரின் உதவியுடன் பெரியவரின் படம் வரையப்படுகிற்து. தீவிரவாதிகள், பெரியவர் கூறும் இடத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கு உள்ள மேடையில் அவர்களை விட்டுவிட்டு காவலரை நகரச் சொல்கிறார். பிறகு ஒரு தொலைபேசி அந்த மேடையின் கீழ் ஒலிக்கிறது. தொலைபேசியை தீவிரவாதி ஒருவன் எடுத்து பேசு பித்தானை அழுத்தியவுடன் குண்டு வெடித்து மூவர் இறந்து போகிறான். நான்காவது ஆளை பிடித்து வைத்துள்ள காவரிடமும் காவல்துறையுடனும் பெரியவர் ஒரு நீண்ட உரை நிகழ்த்துகிறார். பல வெடிகுண்டு சம்பங்களுக்கு பொறுப்பானவர்களை அரசு ஒன்றுமே செய்யவில்லை. எனவே தான் திட்டம் தீட்டி அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் மீதமிருக்கும் ஒருவரையும் நீங்கள் சுட்டுக் கொன்றால், குண்டு வைத்திருக்கும் இடங்களை கூறுவதாகவும் கூறுகிறார். அந்த தீவிரவாதியும் சுடப்படுகிறான். பெரியவரின் வீர உரையைக் கேட்ட கணிணி நிபுணரும் அவர் இருக்குமிடம் பற்றி தான் கூறியதாக சொன்ன தகவல் தவறு என்று கூறி பெரிவர் நல்ல மனிதன் என்று கூறுகிறார். பெரியவரின் படத்தை வரைவதற்கு உதவிய காவலரும் படத்தில் உள்ளவர் போன்று அந்த மனிதர் இருக்க மாட்டார் என்று பின்வாங்குகிறார். பெரியவர் கமிஷனர் இருக்குமிடத்திற்கு விரைகிறார், அதற்குள் பெரியவர் அவருடைய உபகரணங்களை அழித்துவிடுகிறார். கமிஷனர், பெரியவரை பார்த்து சாதாரணமாக பேசிவிட்டு கதையை முடிக்கிறார்.
இதை ஒரு மசாலாப்படம் என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. படத்தில் பெரியவர் தன்னை ஒரு சாதாரண மனிதன் (Common Man) என்றும் தன்னுடைய குரல் சாதாரண மனிதனின் குரல் என்றும் கூறுகிறார்; ஆனால் அவரின் செய்கைகள் பராக்கிரமங்கள் எதுவும் சாதரண மனிதனின் நடவடிக்கைக்குள் வராது. கமிஷனரிடம் பேசும் பெரியவரின் நீண்ட உரையானது வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது. அதில் பெரியவர் ஒரு சிறிய கைப்பெட்டியை வைத்துக் கொள்டு மும்பய் புறநகர் ரயிலில் பயணம் செய்பவராக காண்பிக்கப்படுகிறார். இது சாதராண மனிதன் தான். ரயில் குண்டு வெடிப்பின்போது பாதிக்கப்ட்டவர்களின் கதையை அந்த உரையில் கூறுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதன் பல்வேறு நாடுகளில் இயங்கும் தொலைபேசி நிறுவனங்களின் சிம்கார்டுகளை பெற்றதெப்படி? ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பையை காவல்நிலையத்தில் வைக்குமளவிற்கு துணிச்சல் எப்படி வந்ததது? சுhதரண மனிதன் ஜுஹு பீச் விமானதளத்தில் ஒரு மேடையைப் போட்டு அதனடியில் வெடிகுண்டு வைத்துச் செல்வது இயலாத காரியம். சாதாரண மனிதன் போலீஸ் கமிஷனரிடம் பேரம் பேசி மிரட்டல்காரனாகவும் இருக்க முடியாது. அதுவும் வீட்டிலிருந்து மனைவி தொலைபேசியில் அழைத்து, வீட்டிற்கு திரும்பும் பொழுது தக்காளி வாங்கிக் கொண்டு வரும்படி கூறும் அளவிற்கு சாதாரண மனிதன்.
படத்தில் காதல் பாட்டு சண்டையெல்லாமில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்கு புல்லட் ட்ரெயின் உத்தி பயன்பட்டிருக்கிறது எனினும் இது பாராட்டப்பட வேண்டியதே. எனினும் படத்தின் மையக் கருவான தீவிரவாதம் பற்றிய புரிதல் மிகவும் கோளாருடையது; ஆபத்தானது. தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றிய எந்த ஆய்வும் தேடலும் படத்தில் இல்லை; பெரியவரின் உரையிலும், குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகள் சொல்லும் நியாயங்களே அவர்களை கொல்வதற்கும் வைக்கப்படுகிறது. நீண்டகாலம் நியாயம் கிடைக்காத குற்றத்திற்கு, தன்னைப் போன்ற சாதராண மனிதன் நியாயம் வழங்க முன்வந்திருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொண்டால், இதே போனற் வாதம் குஜராத் படுகொலைகள், மற்ற வகுப்பு கலவரங்கள், ஒரிஸா படுகொலைகள் செய்த யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் தீவரவாதிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். பெரியவர் நிகழ்த்தும் உரைகளில் இதுவரை நடைபெற்ற அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் மாலேகான் உள்ளிட்ட இந்து தீவிரவாதிகள் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையும் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அவர் பழிவாங்க முன்வந்திருப்பது நான்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமே. ஏன் ஒரு பிரக்ஞ்யா தாக்கூர் சேர்க்கப்படவில்லை? படம் எடுக்கும் பொழுது இந்துத் தீவிரவாதிகளும் குண்டு வைத்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகவில்லை என்றாலும் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லீம் தீவரவாதிகளே காரணம் என்று போகிற போக்கில் கூறுவதுதான் ஆபத்தானது. தற்போது இந்துத் தீவிரவாதம் அம்பலமான நிலையிலும் தற்போது எந்த இயக்குனராவது பிரக்ஞ்யா தாக்கூர் போன்றவர்களை மையமாக வைத்து படம் எடுக்க முடியும்? எடுத்தாலும் படத்தை ஓட விட்டுவிடுவார்களா? அதற்கு சாந்தாராம் விருது கிடைக்குமா? அப்பொழுது விசாரணை முடியும்வரை குற்றவாளி என்ற தீர்ப்பு கூறமுடியாது என்ற வாதமும், மனித உரிமை குரலும் ஓங்கி ஒலிக்கும். மும்பய் நகரின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன் பற்றி பேசும் இயக்குனர், இந்து வகுப்புவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட இன்னொரு ரக சாதாரண மனிதர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? அது கதையின் கரு இல்லையென்றாலும் இவரின் படைப்பு மக்களிடத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது நமது நாட்டில் வாழும் இன்னொரு சாரார் பிரச்சனைகளை முற்றிலுமாக நிராகரித்து அவர்கள் மனிதர்களே இல்லையென்று புறமொதுக்கும் கயமைத்தனமே இப்படம் ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். பிடிபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பதை விசாரணையால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் “சாதாரண மனிதன்“ அவரே முடிவு செய்து அவரே தண்டனை வழங்குவது என்பது கட்டை பஞ்சாயத்தைவிட கேவலமானது. மாலேகான் குண்டு வெடிப்பு நடத்தியவர்களும் இந்த “சாதாரண மனிதன்“ கூறுவதையேதான் கூறுகிறார்கள். பல நேரங்களில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையே. அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் மோடி, தெகாடியா, அத்வானி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கும் பொழுது நீதி எப்படி சுயமாக இயங்க முடியும்? கலைஞன் என்பவன் பிரச்சனையை பொதுவாக பார்ப்பவனாக இருக்க வேண்டும், பிரச்சனைகளின் ஆணிவேரை தேடுபவனாக இருக்க வேண்டும். இந்த குணாம்சமில்லாத கலைஞனின் மனவினைத் திறத்தால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. நீரஜ்பாண்டேக்கு சினிமா அழகியல் தெரிந்திருந்தாலும் அவரது படைப்புகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படைப்பு மக்களை தவறான வழியில் கொண்டு செல்லும் நோக்கமுடையது.
இப்படத்தின் சிறப்பம்சம்: இதில் காதல் கிடையாது, பாடல்கள் கிடையாது, சண்டை கிடையாது. எனவே இது மசாலப்படமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அனுபம் கேர் மற்றும் நஸிருதீன் ஷா ஆகிய நடிகர்களின் பாத்திரமே பிரதானமானது. ஓய்வு பெற்ற மும்பய் நகர போலீஸ் கமிஷன் தன்னுடைய கடைசி நாள் பணியின் அனுபவம் பற்றி கூறுவதாக கதையைத் துவங்குகிறார். பெரியவர் ஒருவர் (நஸிருதீன் ஷா) மும்பய் போலீஸ் கமிஷனர் (அனுபம் கேர்) அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் தன்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டதாக கூறி புகார் கொடுக்கச் சென்று அங்கு வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்புகிறார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டு, நவீனக் கருவிகளின் துணையுடன் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு தான் மும்பயில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு முக்கிய முஸ்லீம் தீவிரவாதிகளை விடுவிக்க முன்வந்தால், குண்டு வைத்த இடங்களை சொல்வதாகவும் கூறுகிறார். அசட்டை செய்த போலீஸ் கமிஷனரிடம் ‘நான் குண்டு வைத்ததை நம்பவில்லை என்றால், உங்கள் அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறேன்; அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறார். கமிஷனரிடம் பேசும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டின் சிம்கார்டை பயன்படுத்துவதால் இவருடைய இடத்தை மோப்பம் பிடிப்பதற்கு காவல்துறைக்கு சிரமப்படுகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி நபரை தொடர்பு கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றால், உங்களுக்கு நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டிய பரபரப்பான செய்தி கிடைக்கும் என்று கூறவே, அத்தொலைக்காட்சியும் உபகரணங்களுடன் அங்கு சென்று நேரடி ஒளிபரப்பை துவங்குகிறது. மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும் பெரியவருக்கு அங்கு நடப்பது தொலைக்காட்சிமூலம் தெரியவர, தன்னுடைய அடுத்த காயை நகர்த்துகிறார் பெரியவர்.
இப்பொழுது தான் குறிப்பிடும் நான் முஸ்லீம் தீவிரவாதிகளை தான் சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து விட்டால், குண்டு வைக்கப்பட்டிருக்கும் இடங்களை கூறுவதாக கூறுகிறார். கமிஷனரும் முதலமைச்சரும் கூடி பேசி முடிவெடுத்து நான்கு தீவிரவாதிகளை விடுவிப்பதாகவும், பெரியவர் சொல்லும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதாகவும் உறுதியளிக்கின்றனர். இதற்கிடையில், பெரியவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அவரை கண்டுபிடிக்க ஒரு கணிணி சங்கேத நிபுணரை (Hacker) அழைத்து பணியில் ஈடுபடுத்துகின்றனர். ஆரம்பத்தில் புகார் வாங்கிய காவலரின் உதவியுடன் பெரியவரின் படம் வரையப்படுகிற்து. தீவிரவாதிகள், பெரியவர் கூறும் இடத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கு உள்ள மேடையில் அவர்களை விட்டுவிட்டு காவலரை நகரச் சொல்கிறார். பிறகு ஒரு தொலைபேசி அந்த மேடையின் கீழ் ஒலிக்கிறது. தொலைபேசியை தீவிரவாதி ஒருவன் எடுத்து பேசு பித்தானை அழுத்தியவுடன் குண்டு வெடித்து மூவர் இறந்து போகிறான். நான்காவது ஆளை பிடித்து வைத்துள்ள காவரிடமும் காவல்துறையுடனும் பெரியவர் ஒரு நீண்ட உரை நிகழ்த்துகிறார். பல வெடிகுண்டு சம்பங்களுக்கு பொறுப்பானவர்களை அரசு ஒன்றுமே செய்யவில்லை. எனவே தான் திட்டம் தீட்டி அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் மீதமிருக்கும் ஒருவரையும் நீங்கள் சுட்டுக் கொன்றால், குண்டு வைத்திருக்கும் இடங்களை கூறுவதாகவும் கூறுகிறார். அந்த தீவிரவாதியும் சுடப்படுகிறான். பெரியவரின் வீர உரையைக் கேட்ட கணிணி நிபுணரும் அவர் இருக்குமிடம் பற்றி தான் கூறியதாக சொன்ன தகவல் தவறு என்று கூறி பெரிவர் நல்ல மனிதன் என்று கூறுகிறார். பெரியவரின் படத்தை வரைவதற்கு உதவிய காவலரும் படத்தில் உள்ளவர் போன்று அந்த மனிதர் இருக்க மாட்டார் என்று பின்வாங்குகிறார். பெரியவர் கமிஷனர் இருக்குமிடத்திற்கு விரைகிறார், அதற்குள் பெரியவர் அவருடைய உபகரணங்களை அழித்துவிடுகிறார். கமிஷனர், பெரியவரை பார்த்து சாதாரணமாக பேசிவிட்டு கதையை முடிக்கிறார்.
இதை ஒரு மசாலாப்படம் என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. படத்தில் பெரியவர் தன்னை ஒரு சாதாரண மனிதன் (Common Man) என்றும் தன்னுடைய குரல் சாதாரண மனிதனின் குரல் என்றும் கூறுகிறார்; ஆனால் அவரின் செய்கைகள் பராக்கிரமங்கள் எதுவும் சாதரண மனிதனின் நடவடிக்கைக்குள் வராது. கமிஷனரிடம் பேசும் பெரியவரின் நீண்ட உரையானது வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது. அதில் பெரியவர் ஒரு சிறிய கைப்பெட்டியை வைத்துக் கொள்டு மும்பய் புறநகர் ரயிலில் பயணம் செய்பவராக காண்பிக்கப்படுகிறார். இது சாதராண மனிதன் தான். ரயில் குண்டு வெடிப்பின்போது பாதிக்கப்ட்டவர்களின் கதையை அந்த உரையில் கூறுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதன் பல்வேறு நாடுகளில் இயங்கும் தொலைபேசி நிறுவனங்களின் சிம்கார்டுகளை பெற்றதெப்படி? ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பையை காவல்நிலையத்தில் வைக்குமளவிற்கு துணிச்சல் எப்படி வந்ததது? சுhதரண மனிதன் ஜுஹு பீச் விமானதளத்தில் ஒரு மேடையைப் போட்டு அதனடியில் வெடிகுண்டு வைத்துச் செல்வது இயலாத காரியம். சாதாரண மனிதன் போலீஸ் கமிஷனரிடம் பேரம் பேசி மிரட்டல்காரனாகவும் இருக்க முடியாது. அதுவும் வீட்டிலிருந்து மனைவி தொலைபேசியில் அழைத்து, வீட்டிற்கு திரும்பும் பொழுது தக்காளி வாங்கிக் கொண்டு வரும்படி கூறும் அளவிற்கு சாதாரண மனிதன்.
படத்தில் காதல் பாட்டு சண்டையெல்லாமில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்கு புல்லட் ட்ரெயின் உத்தி பயன்பட்டிருக்கிறது எனினும் இது பாராட்டப்பட வேண்டியதே. எனினும் படத்தின் மையக் கருவான தீவிரவாதம் பற்றிய புரிதல் மிகவும் கோளாருடையது; ஆபத்தானது. தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றிய எந்த ஆய்வும் தேடலும் படத்தில் இல்லை; பெரியவரின் உரையிலும், குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகள் சொல்லும் நியாயங்களே அவர்களை கொல்வதற்கும் வைக்கப்படுகிறது. நீண்டகாலம் நியாயம் கிடைக்காத குற்றத்திற்கு, தன்னைப் போன்ற சாதராண மனிதன் நியாயம் வழங்க முன்வந்திருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொண்டால், இதே போனற் வாதம் குஜராத் படுகொலைகள், மற்ற வகுப்பு கலவரங்கள், ஒரிஸா படுகொலைகள் செய்த யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் தீவரவாதிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். பெரியவர் நிகழ்த்தும் உரைகளில் இதுவரை நடைபெற்ற அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் மாலேகான் உள்ளிட்ட இந்து தீவிரவாதிகள் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையும் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அவர் பழிவாங்க முன்வந்திருப்பது நான்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமே. ஏன் ஒரு பிரக்ஞ்யா தாக்கூர் சேர்க்கப்படவில்லை? படம் எடுக்கும் பொழுது இந்துத் தீவிரவாதிகளும் குண்டு வைத்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகவில்லை என்றாலும் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லீம் தீவரவாதிகளே காரணம் என்று போகிற போக்கில் கூறுவதுதான் ஆபத்தானது. தற்போது இந்துத் தீவிரவாதம் அம்பலமான நிலையிலும் தற்போது எந்த இயக்குனராவது பிரக்ஞ்யா தாக்கூர் போன்றவர்களை மையமாக வைத்து படம் எடுக்க முடியும்? எடுத்தாலும் படத்தை ஓட விட்டுவிடுவார்களா? அதற்கு சாந்தாராம் விருது கிடைக்குமா? அப்பொழுது விசாரணை முடியும்வரை குற்றவாளி என்ற தீர்ப்பு கூறமுடியாது என்ற வாதமும், மனித உரிமை குரலும் ஓங்கி ஒலிக்கும். மும்பய் நகரின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன் பற்றி பேசும் இயக்குனர், இந்து வகுப்புவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட இன்னொரு ரக சாதாரண மனிதர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? அது கதையின் கரு இல்லையென்றாலும் இவரின் படைப்பு மக்களிடத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது நமது நாட்டில் வாழும் இன்னொரு சாரார் பிரச்சனைகளை முற்றிலுமாக நிராகரித்து அவர்கள் மனிதர்களே இல்லையென்று புறமொதுக்கும் கயமைத்தனமே இப்படம் ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். பிடிபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பதை விசாரணையால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் “சாதாரண மனிதன்“ அவரே முடிவு செய்து அவரே தண்டனை வழங்குவது என்பது கட்டை பஞ்சாயத்தைவிட கேவலமானது. மாலேகான் குண்டு வெடிப்பு நடத்தியவர்களும் இந்த “சாதாரண மனிதன்“ கூறுவதையேதான் கூறுகிறார்கள். பல நேரங்களில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையே. அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் மோடி, தெகாடியா, அத்வானி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கும் பொழுது நீதி எப்படி சுயமாக இயங்க முடியும்? கலைஞன் என்பவன் பிரச்சனையை பொதுவாக பார்ப்பவனாக இருக்க வேண்டும், பிரச்சனைகளின் ஆணிவேரை தேடுபவனாக இருக்க வேண்டும். இந்த குணாம்சமில்லாத கலைஞனின் மனவினைத் திறத்தால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. நீரஜ்பாண்டேக்கு சினிமா அழகியல் தெரிந்திருந்தாலும் அவரது படைப்புகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படைப்பு மக்களை தவறான வழியில் கொண்டு செல்லும் நோக்கமுடையது.
December 6, 2008
அரசியல்மயமல்லாதாக்கலின் அரசியல் (Politics of Depoliticisation)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; நடுத்தர வர்க்கத்திற்கு இளைத்தவன் அரசியல்வாதி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சகட்டுமேனிக்கு அடிவாங்குபவன் அரசியல்வாதி. அதுவும் சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளை கேலி செய்து ஒரு மெயில் அனுப்பி விட்டால் தேன் குடித்த நரியாகி விடுவார்கள். யார் எங்கிருந்து எழுதினார் என்று தெரிந்து ஆப்பு கிடைக்கும் என்ற நிலை இல்லை என்ற தைரியத்தில். அப்படியே தேடி வந்தாலும் எனக்கு மெயில் வந்தது சும்மா ஃபார்வட் பண்ணினேன் என்று சமாளிக்கலாம் என்ற தைரியம் வேறு. இதில் பலருக்கு ஐபி அட்ரஸை வைத்து யார் அனுப்பினார்கள் என்று கண்டுபிடிப்பது எளிது என்று தெரியாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள நிலை இதுதான். இந்த அரசியல்வாதிகளையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளவேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் ஆசை. இந்த ஆசை நிறைவேறினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டுமா?
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலங்கையை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆசையை தெள்ளத் தெளிவாக நிறைவேற்றி வைத்தவர்கள் விடுதலைப் புலிகளும், ஜனதா விமுக்தி பெருமுனா என்ற தீவிரவாத அமைப்பும். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமலஹாசனுக்கூட பெண்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை ஆனால் இலங்கையில் கிட்டத்தட்ட 1993க்கு முந்தைய அனைத்து அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டுவிட்டனர். அமிர்தலிங்கம் முதல் பிரேமதாஸா வரை அனைவரும் சாகடிக்கப்பட்டனர். ஆக இனிமேல் இலங்கையில் அரசியல்வாதிகள் தொல்லை இல்லை என்று ஆசுவாசப்பட்ட நமது நடுத்தரவர்க்கத்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை, இன்னொரு புதிய தலைமுறை அரசியல்வாதிகள் ஒரு சில ஆண்டுகளுக்குள் முளைத்துவிட்டனர்; அதே கொள்கைகளோடும் அதே நடைமுறைகளோடும்!
அன்று கிளை மட்டத்திலும் வார்டு மட்டத்திலும் இருந்தவர்கள் இன்று தேசிய மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். அப்படியானால் இன்று கிளைமட்டத்தில் யார் இருக்கிறார்கள்? அன்று வீட்டில் சும்மா இருந்தவர்கள் இன்று திண்ணை காலியானதும் கிளைமட்டத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். நாளை தேசிய மட்டத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மீண்டும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக் கட்டபடுவார்களேயானால் இன்று கிளை மட்டத்தில் இருப்பவர் நாளை தேசிய மட்டத்திற்கு வருவார். இன்று வீட்டில் சும்மா இருந்து கொண்டிருப்பவர் கிளைமட்ட அரசியல்வாதியாகிவிடுவார். நமது நாட்டிலும் இன்றுள்ள அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் இலங்கையில் நடந்தது போன்று புதிய தலைமுறை அரசியல்வாதிகள் முளைத்து விடுவார்கள் என்று ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆக அரசியல்வாதிகள் என்ற இந்த பீடையை ஒழிக்கவே முடியாதா?
எது அரசியல்வாதிகளை இப்படி உருவாக்குகிறது? வெறும் மாலிக்யூல்கள் மட்டுமே மிதந்து கொண்டிருந்த இவ்வுலகில் (பிரைமோவல் சூப் என்று உயிரியல் வர்ணிக்கிறது) ஒரு கட்டத்தில் DNA ஆக உருமாறி உயிர் தோன்றியதைப் போல், சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து அரசியல்வாதிகள் எப்படி உருவெடுக்கிறார்கள்? DNA உருவானதிற்கான புறச் சூழ்நிலை என்ன என்று ஒரு (விஷயம் தெரிந்த!) உயிரியல் மாணவனால் கூறமுடியும். ஆனால் அரசியல்வாதி உருவாவதற்கான சூழ்நிலை என்ன என்று இந்த சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினரால் கூற முடியாது ஏனென்றால் அந்த திசையை நோக்கி சிந்திப்பது என்ற ஸ்மரணையே அவர்களுக்கு கிடையாது.
இதோடு ஒட்டிய இன்னொரு கருத்தும் சைபர் உலக நமது நடுத்தர மக்கள் மத்தில் உலாவருகிறது. நம்மைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் எல்லாம் சரிப்பட்டு வராது. சர்வாதிகாரம்தான் வேண்டும். ஒரு நல்ல நாட்டுபற்றுடைய சர்வாதிகாரி வேண்டும். அதுவும் மிலிட்டரி ஆள் இருந்தா தான் கட்டுப்படுத்த முடியும். அது அது அதுபாட்டுக்கு இயங்கும். எந்த ஊழலும் இருக்காது. அவனவன் அவன் வேலையைப் பார்த்துட்டுப்போவான். சும்மா நடுத்தெருவில் மேடை போட்டு கத்திக்கிட்டிருக்க முடியாது. பாருங்க நம்ம இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்ஸி கொண்டு வந்தார்கள். என்னதான் சர்வாதிகாரம் என்று சொன்னாலும் ரயில் நேரத்திற்கு ஒடினது. கவர்னர் மாளிகையில் பைல்கள் பைசலாகி பறந்தன. இதுவும் அரசியல்வாதிகளை ஒழித்து கட்டிவிட்டு ராஜாங்கம் பண்ண வேண்டும் என்ற ஆசைதான். அதுவும் ரஜினி படத்தை பார்த்து, பார்த்து, யாராவது நமக்காக சண்டை போட்டு எல்லவற்றையும் சரி செய்து விடமாட்டார்களா, நாம் பாட்டு நமது வேலையை பார்த்துக் கொண்டே அவ்வப்போது டிவியை பார்த்துவிட்டு ஒன்னு ரெண்டு இமெயில் அனுப்பிவிட்டு பொழுதைக் கழிக்க முடியதா என்ற நப்பாசையால் வந்தது இந்த ஆசை.
இதற்கும் உதாரணமாக திகழுகிறது நமக்கு வடமேற்கு அண்டை நாடு. நமக்கு 12 மணிநேரம் முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, முடிந்து விட்ட 61 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகாரம்தான். அதுவும் ராணுவ சர்வாதிகாரம். அதிகார பரிணாம வளர்ச்சி எப்படியிருக்கிறது? அரசியல்வாதிகள், ராணுவம், உளவு, சண்டியர்கள் ஆகிய நான்குமுனை அதிகார மையங்கள். எதன் கீழும் எதுவும் இல்லை. சண்டியர்களை கட்டுப்படுத்த உளவுத்துறை நினைத்தால் ராணுவத்துடன் சண்டியர்கள் கூட்டு சேர்ந்து உளவுத்துறையை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் ராணுவத்தை கட்டுப்படுத்த நினைத்தால் மற்ற மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளை தீர்த்துக் கட்டிவிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் பெனாஸிர்).
அரசியல் என்றால் என்ன புரிதலில் உள்ள போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.
தற்போது நடைபெற்று வரும் தள்ளுமுள்ளுகள் மேல் மட்டத்தில் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் போல் தெரிந்தாலும், அடிமட்டத்தில் பொருளாதாரக் குழுக்களின் போராட்டமே நடைபெற்றுவருகிறது. அடிமட்டத்தில் நடைபெறும் போராட்டத்தை வெளியில் தெரியாமல் தடுப்பதற்கான ஏற்பாடே மேடை அரசியல் உள்ளிட்ட அம்சங்கள்; இவற்றால் மக்கள் வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் காட்சிகளான சவால்கள், அறிக்கைகள், பாதுகாப்பு பந்தாக்கள், விமானப்பயணங்கள் போன்ற அம்சங்கள் உண்டு, இதையும் தாண்டி துருத்திக் கொண்டு அடிமட்ட விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததால், depoliticise செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது.
சாக்கடை அரசியலுக்கு மாற்று தன்னார்வக்குழுக்கள் (NGO)என்ற கோட்பாடும் தற்போது முன்வைக்கப்படுகிறது. இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடானாது, அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாரதாரக் குழுக்களின் போராட்டத்தில் அக்குழுக்களின் பலங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதற்காகவே இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவிதத்தில் இவைகள் depoliticisaion போக்கிற்கு பங்களிக்கின்றன. ரஜினிப்பட பார்வையாளர் போல் யாராவது வந்து எதாவது நமக்காக செய்துவிடமாட்டார்களா என்ற நப்பாசை இல்லாத ஒரு நடுத்தரவர்க்க பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசியல் மேல் அசூயை இருக்கிறது. இவர்களுக்கு வடிகாலாக உள்ளதுதான் NGO. இதுவும் இல்லாவிட்டால் பொறுமை மீறி இவர்களும் அரசியலுக்கு வந்துவிட்டால் அடிமட்டத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தின் விளைவே NGO ஏற்பாடு. NGOக்களும் Micro Levelலில் சிறு மாற்றங்களை உண்டாக்கி ஆத்ம திருப்தி அடைந்து விடுவார்கள். Macro Levelல் எந்த மாற்றமும் ஏற்படாமல் Status quo maintain ஆகிவிடும்
Depoliticising ஏற்பாட்டிற்குள் ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலையை மாற்றியமைப்பதை தடுக்கும் நோக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை dirty politicians போன்ற நடுத்தர வர்க்க கருத்தியல்கள் depoliticisation ஏற்பாட்டிற்கு உதவிகரமாக உள்ளது. ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலை எந்த பொருளாதாரக் குழுவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துவிடும். ஆனால் இந்த depoliticisation என்ற போக்கானது நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே பொருந்துகிறது. இவர்களே சமூகத்தில் கருத்தியல்கள் ஏந்திச் செல்பவர்கள். Concernt Manufacturers ஆனால் இதையும் மீறி அடித்தட்டு மக்களின் அரசியல் பங்கெடுப்பு என்பது அதிகரித்து வருகிறது. ‘சாக்கடை அரசியலை‘ நடுத்தர வர்க்கம் புறக்கணித்தாலும் மக்கள் திரள் புறக்கணிக்கத் தயாரில்லை. இன்றுவரை நடைபெற்றுவந்திருக்கின்ற தேர்தல்களில் மக்கள் பங்கெடுப்பு என்பது 60 சதத்திற்கு மேலும் இடதுசாரிகள் பலமாயுள்ள மாநிலங்களில் 75 சதத்திற்கு மேலும் இருந்திருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தல் இருந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில வாக்குப்பதிவு 60ஐ தாண்டிவிட்டது. பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போக்கின் பலமான செய்தியே இந்த பெருந்திரள் மக்கள் பங்கெடுப்பு.
இதை மட்டுப்படுத்த Depoliticisation ஏற்பாடும் பலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் ஊடகங்களில் வரும் கட்டுரைகளும், சைபர் உலக இமெயில் சங்கலிகளும். குறிப்பாக மந்திரிகள் செய்யும் செலவுகள், பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு விஐபிகளுக்கான பாதுகாப்பு செலவுகள் என்பதை absolute termல் கோடிகளில் காண்பித்து சில ஆயிரங்களைக் கூட பார்க்காத சாதாரண மக்களை கோடிகளில் கணக்கு காட்டினால் தெண்டச் செலவுகள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளடங்கியிருக்கிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட் தொகையுடனோ, உள்நாட்டு மொத்த உற்பத்தியுடனோ இந்த தொகைகளை ஒப்பீடு செய்தால் இவை அனைத்தும் சொற்பத் தொகைகளே. அரசியல்வாதிகள் பந்தாக்களும் தெண்டச் செலவுகளையும் நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்த பந்தாக்களாலும் தெண்டச் செலவுகளாலும் நொந்து போயிருக்கின்ற மக்களுக்கு இந்த தெண்டச் செலவுகள் சில கோடிகளில் உள்ளது என்ற நம்பர்களை கொடுத்தால் மேலும் கோபம் அதிகமாகி depoliticisaiton போக்கு துரிதப்படும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும்.
நாம் அறிந்தோ, அறியாமலே பிரமுகர்களாக வளர்ந்துவிட்ட அரசியல்வாதிகள் அவர்கள் உதிர்க்கும் கருத்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்றால் அதிக பணம் செலவழித்து உயிரை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்டிடியினருக்கு எதிராக கருத்துக் கூறிக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவையோ சு.சாமியையே அவர்களின் குண்டுகளுக்கு இரையாகும்படி அனுமதிக்க முடியாது. பஞ்சாப் தீவிரவாதம் முழுவீச்சில் இருந்தபொழுது ஹரிகிஷன்சிங் சுர்ஜித் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் அதற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பியதால் அவரது உயிரை எடுக்க நடைபெற்ற முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு காரணம் அவருக்கு இஜட் பிரிவு பாதுகாப்பு கொடுத்ததால்தான் என்பதை மறுக்கமுடியாது. காஷ்மீரில் முகமது தாரிகமி உள்ளிட்ட அரசியல்வாதிகள் இஜட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு இருப்பதால்தான் இன்றுவரை உயிரோடு இருக்க முடிகிறது. இந்த இரு அரசியல் வாதிகளும் சென்னை வந்தபொழுது வெறும் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு சென்னை தெருக்களில் உலாவந்ததை காணமுடிந்தது. இதே நபர்கள் அவர்கள் மாநிலங்களுக்குச் சென்றால் கடுமையான பாதுகாப்புடனே நடமாட முடிந்தது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்களிடம் அடையாளம் காட்டாமல் பந்தா அரசியல்வாதிகளை மட்டுமே படம் பிடித்து அசூயையை உருவாக்கும் ஏற்பாட்டை நம்மால் ஏன் புரிந்து கொளள முடியவில்லை. இதற்கான செலவுகளை எல்லாம் வெட்டி, அவர்கள் செத்தால் சாகட்டும் என்று விட்டு விட்டால் அண்டை நாட்டில் உள்ளது போல் சண்டியர்கள் ஒரு அதிகாரமையமாக உருவெடுப்பார்கள். இதை சாதாரண மக்களும் விரும்பவில்லை. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் விரும்பவில்லை, ஒருவேளை இவர்களுக்கு தேவைப்பட்டால் தங்களுக்கு கட்டுப்பட்ட சண்டியர் அதிகார மையத்தை உருவாக்கிவிடுவார்கள் என்பதிலும் நாம் அண்டை நாட்டு உதாரணத்திலிருந்து கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் சண்டியர் அதிகார மையம் உருவாவதை நாம் அனுமதிக்க முடியாது ஏனென்றால் அது பொருளாராக் கோரிக்கைளுக்கும் Empowermentக்குமான போராட்டம் அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார மக்கள் குழுக்களின் பலத்தை மாற்றியமைக்கும் தன்மைகொண்டதாகவே இது அமையும்.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலங்கையை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆசையை தெள்ளத் தெளிவாக நிறைவேற்றி வைத்தவர்கள் விடுதலைப் புலிகளும், ஜனதா விமுக்தி பெருமுனா என்ற தீவிரவாத அமைப்பும். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமலஹாசனுக்கூட பெண்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை ஆனால் இலங்கையில் கிட்டத்தட்ட 1993க்கு முந்தைய அனைத்து அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டுவிட்டனர். அமிர்தலிங்கம் முதல் பிரேமதாஸா வரை அனைவரும் சாகடிக்கப்பட்டனர். ஆக இனிமேல் இலங்கையில் அரசியல்வாதிகள் தொல்லை இல்லை என்று ஆசுவாசப்பட்ட நமது நடுத்தரவர்க்கத்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை, இன்னொரு புதிய தலைமுறை அரசியல்வாதிகள் ஒரு சில ஆண்டுகளுக்குள் முளைத்துவிட்டனர்; அதே கொள்கைகளோடும் அதே நடைமுறைகளோடும்!
அன்று கிளை மட்டத்திலும் வார்டு மட்டத்திலும் இருந்தவர்கள் இன்று தேசிய மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். அப்படியானால் இன்று கிளைமட்டத்தில் யார் இருக்கிறார்கள்? அன்று வீட்டில் சும்மா இருந்தவர்கள் இன்று திண்ணை காலியானதும் கிளைமட்டத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். நாளை தேசிய மட்டத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மீண்டும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக் கட்டபடுவார்களேயானால் இன்று கிளை மட்டத்தில் இருப்பவர் நாளை தேசிய மட்டத்திற்கு வருவார். இன்று வீட்டில் சும்மா இருந்து கொண்டிருப்பவர் கிளைமட்ட அரசியல்வாதியாகிவிடுவார். நமது நாட்டிலும் இன்றுள்ள அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் இலங்கையில் நடந்தது போன்று புதிய தலைமுறை அரசியல்வாதிகள் முளைத்து விடுவார்கள் என்று ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆக அரசியல்வாதிகள் என்ற இந்த பீடையை ஒழிக்கவே முடியாதா?
எது அரசியல்வாதிகளை இப்படி உருவாக்குகிறது? வெறும் மாலிக்யூல்கள் மட்டுமே மிதந்து கொண்டிருந்த இவ்வுலகில் (பிரைமோவல் சூப் என்று உயிரியல் வர்ணிக்கிறது) ஒரு கட்டத்தில் DNA ஆக உருமாறி உயிர் தோன்றியதைப் போல், சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து அரசியல்வாதிகள் எப்படி உருவெடுக்கிறார்கள்? DNA உருவானதிற்கான புறச் சூழ்நிலை என்ன என்று ஒரு (விஷயம் தெரிந்த!) உயிரியல் மாணவனால் கூறமுடியும். ஆனால் அரசியல்வாதி உருவாவதற்கான சூழ்நிலை என்ன என்று இந்த சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினரால் கூற முடியாது ஏனென்றால் அந்த திசையை நோக்கி சிந்திப்பது என்ற ஸ்மரணையே அவர்களுக்கு கிடையாது.
இதோடு ஒட்டிய இன்னொரு கருத்தும் சைபர் உலக நமது நடுத்தர மக்கள் மத்தில் உலாவருகிறது. நம்மைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் எல்லாம் சரிப்பட்டு வராது. சர்வாதிகாரம்தான் வேண்டும். ஒரு நல்ல நாட்டுபற்றுடைய சர்வாதிகாரி வேண்டும். அதுவும் மிலிட்டரி ஆள் இருந்தா தான் கட்டுப்படுத்த முடியும். அது அது அதுபாட்டுக்கு இயங்கும். எந்த ஊழலும் இருக்காது. அவனவன் அவன் வேலையைப் பார்த்துட்டுப்போவான். சும்மா நடுத்தெருவில் மேடை போட்டு கத்திக்கிட்டிருக்க முடியாது. பாருங்க நம்ம இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்ஸி கொண்டு வந்தார்கள். என்னதான் சர்வாதிகாரம் என்று சொன்னாலும் ரயில் நேரத்திற்கு ஒடினது. கவர்னர் மாளிகையில் பைல்கள் பைசலாகி பறந்தன. இதுவும் அரசியல்வாதிகளை ஒழித்து கட்டிவிட்டு ராஜாங்கம் பண்ண வேண்டும் என்ற ஆசைதான். அதுவும் ரஜினி படத்தை பார்த்து, பார்த்து, யாராவது நமக்காக சண்டை போட்டு எல்லவற்றையும் சரி செய்து விடமாட்டார்களா, நாம் பாட்டு நமது வேலையை பார்த்துக் கொண்டே அவ்வப்போது டிவியை பார்த்துவிட்டு ஒன்னு ரெண்டு இமெயில் அனுப்பிவிட்டு பொழுதைக் கழிக்க முடியதா என்ற நப்பாசையால் வந்தது இந்த ஆசை.
இதற்கும் உதாரணமாக திகழுகிறது நமக்கு வடமேற்கு அண்டை நாடு. நமக்கு 12 மணிநேரம் முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, முடிந்து விட்ட 61 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகாரம்தான். அதுவும் ராணுவ சர்வாதிகாரம். அதிகார பரிணாம வளர்ச்சி எப்படியிருக்கிறது? அரசியல்வாதிகள், ராணுவம், உளவு, சண்டியர்கள் ஆகிய நான்குமுனை அதிகார மையங்கள். எதன் கீழும் எதுவும் இல்லை. சண்டியர்களை கட்டுப்படுத்த உளவுத்துறை நினைத்தால் ராணுவத்துடன் சண்டியர்கள் கூட்டு சேர்ந்து உளவுத்துறையை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் ராணுவத்தை கட்டுப்படுத்த நினைத்தால் மற்ற மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளை தீர்த்துக் கட்டிவிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் பெனாஸிர்).
அரசியல் என்றால் என்ன புரிதலில் உள்ள போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.
தற்போது நடைபெற்று வரும் தள்ளுமுள்ளுகள் மேல் மட்டத்தில் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் போல் தெரிந்தாலும், அடிமட்டத்தில் பொருளாதாரக் குழுக்களின் போராட்டமே நடைபெற்றுவருகிறது. அடிமட்டத்தில் நடைபெறும் போராட்டத்தை வெளியில் தெரியாமல் தடுப்பதற்கான ஏற்பாடே மேடை அரசியல் உள்ளிட்ட அம்சங்கள்; இவற்றால் மக்கள் வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் காட்சிகளான சவால்கள், அறிக்கைகள், பாதுகாப்பு பந்தாக்கள், விமானப்பயணங்கள் போன்ற அம்சங்கள் உண்டு, இதையும் தாண்டி துருத்திக் கொண்டு அடிமட்ட விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததால், depoliticise செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது.
சாக்கடை அரசியலுக்கு மாற்று தன்னார்வக்குழுக்கள் (NGO)என்ற கோட்பாடும் தற்போது முன்வைக்கப்படுகிறது. இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடானாது, அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாரதாரக் குழுக்களின் போராட்டத்தில் அக்குழுக்களின் பலங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதற்காகவே இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவிதத்தில் இவைகள் depoliticisaion போக்கிற்கு பங்களிக்கின்றன. ரஜினிப்பட பார்வையாளர் போல் யாராவது வந்து எதாவது நமக்காக செய்துவிடமாட்டார்களா என்ற நப்பாசை இல்லாத ஒரு நடுத்தரவர்க்க பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசியல் மேல் அசூயை இருக்கிறது. இவர்களுக்கு வடிகாலாக உள்ளதுதான் NGO. இதுவும் இல்லாவிட்டால் பொறுமை மீறி இவர்களும் அரசியலுக்கு வந்துவிட்டால் அடிமட்டத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தின் விளைவே NGO ஏற்பாடு. NGOக்களும் Micro Levelலில் சிறு மாற்றங்களை உண்டாக்கி ஆத்ம திருப்தி அடைந்து விடுவார்கள். Macro Levelல் எந்த மாற்றமும் ஏற்படாமல் Status quo maintain ஆகிவிடும்
Depoliticising ஏற்பாட்டிற்குள் ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலையை மாற்றியமைப்பதை தடுக்கும் நோக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை dirty politicians போன்ற நடுத்தர வர்க்க கருத்தியல்கள் depoliticisation ஏற்பாட்டிற்கு உதவிகரமாக உள்ளது. ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலை எந்த பொருளாதாரக் குழுவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துவிடும். ஆனால் இந்த depoliticisation என்ற போக்கானது நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே பொருந்துகிறது. இவர்களே சமூகத்தில் கருத்தியல்கள் ஏந்திச் செல்பவர்கள். Concernt Manufacturers ஆனால் இதையும் மீறி அடித்தட்டு மக்களின் அரசியல் பங்கெடுப்பு என்பது அதிகரித்து வருகிறது. ‘சாக்கடை அரசியலை‘ நடுத்தர வர்க்கம் புறக்கணித்தாலும் மக்கள் திரள் புறக்கணிக்கத் தயாரில்லை. இன்றுவரை நடைபெற்றுவந்திருக்கின்ற தேர்தல்களில் மக்கள் பங்கெடுப்பு என்பது 60 சதத்திற்கு மேலும் இடதுசாரிகள் பலமாயுள்ள மாநிலங்களில் 75 சதத்திற்கு மேலும் இருந்திருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தல் இருந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில வாக்குப்பதிவு 60ஐ தாண்டிவிட்டது. பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போக்கின் பலமான செய்தியே இந்த பெருந்திரள் மக்கள் பங்கெடுப்பு.
இதை மட்டுப்படுத்த Depoliticisation ஏற்பாடும் பலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் ஊடகங்களில் வரும் கட்டுரைகளும், சைபர் உலக இமெயில் சங்கலிகளும். குறிப்பாக மந்திரிகள் செய்யும் செலவுகள், பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு விஐபிகளுக்கான பாதுகாப்பு செலவுகள் என்பதை absolute termல் கோடிகளில் காண்பித்து சில ஆயிரங்களைக் கூட பார்க்காத சாதாரண மக்களை கோடிகளில் கணக்கு காட்டினால் தெண்டச் செலவுகள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளடங்கியிருக்கிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட் தொகையுடனோ, உள்நாட்டு மொத்த உற்பத்தியுடனோ இந்த தொகைகளை ஒப்பீடு செய்தால் இவை அனைத்தும் சொற்பத் தொகைகளே. அரசியல்வாதிகள் பந்தாக்களும் தெண்டச் செலவுகளையும் நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்த பந்தாக்களாலும் தெண்டச் செலவுகளாலும் நொந்து போயிருக்கின்ற மக்களுக்கு இந்த தெண்டச் செலவுகள் சில கோடிகளில் உள்ளது என்ற நம்பர்களை கொடுத்தால் மேலும் கோபம் அதிகமாகி depoliticisaiton போக்கு துரிதப்படும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும்.
நாம் அறிந்தோ, அறியாமலே பிரமுகர்களாக வளர்ந்துவிட்ட அரசியல்வாதிகள் அவர்கள் உதிர்க்கும் கருத்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்றால் அதிக பணம் செலவழித்து உயிரை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்டிடியினருக்கு எதிராக கருத்துக் கூறிக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவையோ சு.சாமியையே அவர்களின் குண்டுகளுக்கு இரையாகும்படி அனுமதிக்க முடியாது. பஞ்சாப் தீவிரவாதம் முழுவீச்சில் இருந்தபொழுது ஹரிகிஷன்சிங் சுர்ஜித் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் அதற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பியதால் அவரது உயிரை எடுக்க நடைபெற்ற முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு காரணம் அவருக்கு இஜட் பிரிவு பாதுகாப்பு கொடுத்ததால்தான் என்பதை மறுக்கமுடியாது. காஷ்மீரில் முகமது தாரிகமி உள்ளிட்ட அரசியல்வாதிகள் இஜட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு இருப்பதால்தான் இன்றுவரை உயிரோடு இருக்க முடிகிறது. இந்த இரு அரசியல் வாதிகளும் சென்னை வந்தபொழுது வெறும் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு சென்னை தெருக்களில் உலாவந்ததை காணமுடிந்தது. இதே நபர்கள் அவர்கள் மாநிலங்களுக்குச் சென்றால் கடுமையான பாதுகாப்புடனே நடமாட முடிந்தது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்களிடம் அடையாளம் காட்டாமல் பந்தா அரசியல்வாதிகளை மட்டுமே படம் பிடித்து அசூயையை உருவாக்கும் ஏற்பாட்டை நம்மால் ஏன் புரிந்து கொளள முடியவில்லை. இதற்கான செலவுகளை எல்லாம் வெட்டி, அவர்கள் செத்தால் சாகட்டும் என்று விட்டு விட்டால் அண்டை நாட்டில் உள்ளது போல் சண்டியர்கள் ஒரு அதிகாரமையமாக உருவெடுப்பார்கள். இதை சாதாரண மக்களும் விரும்பவில்லை. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் விரும்பவில்லை, ஒருவேளை இவர்களுக்கு தேவைப்பட்டால் தங்களுக்கு கட்டுப்பட்ட சண்டியர் அதிகார மையத்தை உருவாக்கிவிடுவார்கள் என்பதிலும் நாம் அண்டை நாட்டு உதாரணத்திலிருந்து கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் சண்டியர் அதிகார மையம் உருவாவதை நாம் அனுமதிக்க முடியாது ஏனென்றால் அது பொருளாராக் கோரிக்கைளுக்கும் Empowermentக்குமான போராட்டம் அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார மக்கள் குழுக்களின் பலத்தை மாற்றியமைக்கும் தன்மைகொண்டதாகவே இது அமையும்.
December 3, 2007
என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-5
கழுதை விளையாட்டு
சீட்டு விளையாட்டில் 'கழுதை' என்று ஒரு விளையாட்டுண்டு. ஆடுபவர்கள் தங்களிடமுள்ள கழுதைச் சீட்டை அடுத்தவரிடம் தள்ளிவிட முயற்சிப்பார். இறுதியில் யாரிடம் கழுதை அதிகமாக இருக்கிறதோ அவர் தோல்வியுறுவார். என்ரான் ஒப்பந்தமும் மீண்டும் கழுதைச் சீட்டு மாதிரி காங்கிரஸ அரசாங்த்திடமே வந்துவிட்டது. என்ரான் தன்னுடைய முதல் கட்ட நிர்மாணப் பணிகளை முடித்து மகாராஷ்ட்ர மின்வாரியத்திடம் மின்சாரத்தை விற்க ஆரம்பித்தது. அதனுடைய "மீட்டர்" ஓட ஆரம்பித்தது. இடதுசாரிகள் மீண்டும் கூக்குரலிட ஆரம்பித்தார்கள். விளைவு மகாராஷ்ட்ர அரசு கோட்போலே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்ததது.
கோட்போலே கமிட்டி அறிக்கை
என்ரானுடைய விலை நிர்ணயக் கொள்கையானது நியாயமானதல்ல, தர்க்க ரீதியாதல்ல என்ற முடிவுக்கே கோட்போலே கமிட்டி வந்தது. மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் (Power Purchase Agreement) தலைகீழ் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ர அரசு முயல வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு என்ரான் உடன்படவில்லையென்றால், என்ரான் நிறுவனம் யாருக்கு வேண்டுமானலும் மின்சாரத்தை விற்றுக் கொள்ள அனுமதி வழங்கி, மின்வாரியத்தை என்ரான் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோட்போலே கமிட்டி கூறியது. ஏழு பேர் கொண்ட கமிட்டியில் ஒரு கருத்து வேறுபாடும் நிலவியது. என்ரான் விஷயத்தில் நடந்து போன விஷயங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது என்று தெரிந்திருந்தும், கையாண்டவர்கள் ஏன் இதை அனுமதித்தனர்? இதற்குள் ஒரு மாபெரும் ஊழல் அடங்கியிருக்கிறது; எனவே இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கமிட்டியில் ஒருசாராரும், இதற்குள் சென்றால் பண்டோரா பெட்டியை திறந்த கதையாகிவிடும்; ஆகவே மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தடைபடும் என்று மற்றொரு சாரரும் பிணங்கி நின்றனர்.
கோட்போலே கமிட்டியும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியது. மின்வாரியம் இயற்கைக்கும் நடைமுறைக்கும் விதிமுறைகளுக்கும் புறம்பாக வருடத்திற்கு 930 கோடி அதிகம் செலுத்துமாறு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது என்று இடித்துரைத்தது. என்ரான் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதாக கூறியது. இயற்கை எரிவாயுவை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு ஆலையை நிர்மாணித்து அதை இயக்க வேண்டும். இதற்கான மொத்த செலவையும் மின் கொள்முதல் ஒப்பந்ததத்திற்குள் கொண்டு வந்தது. இதைத்தவிர இயற்கை எரிவாயு திரவ ஆலையை தேவையைவிட இருமடங்கு பெரிதாக நிர்மானித்து அதன் திறனில் 50 சதம் மட்டுமே மின் நிலையத்திற்கு பயன்படுத்திக் கொண்டு மீதித்திறனை இதர நிறுவனங்களுக்கு விற்று வந்தது. எனினும் மொத்த செலவையும் மின்வாரியத்திடமிருந்து வசூல் செய்து மோசடி செய்தது என்று கமிட்டி அறிவித்தது. இதைவிட இயற்கை எரிவாயுவை கையாண்டதற்கு துறைமுகச் செலவு உள்ளிட்ட மேலும் பல செலவுகளை மூலதன மீட்பு (Capital Recovery) செலவாக வசூலித்துக் கொண்டது. இறுதியாக கோட்போலே கமிட்டியானது மற்ற செலவுகளை அதிகம் தேடாமல் நேரடியாக மட்டுமே 930 கோடி அதிகம் என்ரானுக்கு செலுத்தியிருப்பதாக கூறியது. இதைத்தவிர, இயற்கை எரிவாயு சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தில் மாற்ற வேண்டும், இயங்கு பாரத்தையும் 30 - 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தமிது; சிவசேனை - பாஜக அரசால் மறுபேச்சு நடத்தி உறுதி செய்த ஒப்பந்தமானது, மீண்டும் காங்கிரஸ அரசாங்கத்தால் கையாளப்படும் போது மோசடி செய்யப்பட்ட தொகையை கையகப்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?
தொடரப்பட்ட ரிட் மனு
நமது நாட்டு சட்டப்படி ஒவ்வொரு மின்திட்டத்தையும் மத்திய மின் ஆணையம் பரிசீலித்து தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். என்ரான் விஷயத்தில் இது நடைபெறவில்லை . இதனை எதிர்த்து சிஐடியூவைச் சேர்ந்து அபய்மேத்தா மத்திய மின் ஆணையம் தன்னுடைய கடமையை செய்ய தவறிவிட்டத என்று வழக்கை தொடர்ந்தார்.
என்ரான் தூக்கிய போர்க்கொடி
கோட்போலே முடிவு தனக்கு எதிராக வரும் என்று என்ரான் நிறுவனம் "எதிர்பாராத அரசியல் நிகழ்வு" (Political Force Majure) என்று போர்க்கொடியை உயர்த்தியது. தபோல் மின்நிலையம் சம்பந்தமாக, மத்திய மாநில அரசுகளோ, தனிநபர்களோ இதர நிறுவனங்களோ இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது என்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் 10-10-2001 அன்று ஒரு தலைபட்சமான (Ex-parte) ஒரு தடையாணையை வாங்கியது. தனக்கும் மகாராஷ்ட்ர மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை இந்திய-அமெரிக்க நல்லுறவு பிரச்சனையாக மாற்றியது. இந்திய அமெரிக்க உறவு என்பது ENRON என்ற ஐந்து எழுத்தில்தான் இருக்கிறது என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பிளாக்வில் மிரட்டல் விடுத்தார். வாஜ்பாய் அரசாங்கமும் மிரட்டலுக்கு அடிபணிந்து தபோல் மின்நிலையத்தில் என்ரானின் பங்குகளை நூறு கோடி டாலருக்கும் (ரூ 4500 கோடி) அதிகமாக விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்புக் கொண்டு இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 2001 ல் வாஜ்பாய் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க பயணத்தில் கையெழுத்தாவதாக இருந்தது.
என்ரானின் மரணம்
இதற்கிடையில என்ரான் நிறுவனம் பல ஆண்டுகளாக செய்து வந்த பல மோசடிகள் அம்பலமாகி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திற்குள் சரிந்து விழுந்து விட்டது. நிறுவனம் மூடப்பட்டு பங்குதாரர்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டு விட்டது ஏனென்றால் அதன் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்து பூஜ்யத்தை எட்டிவிட்டது. இதன் தலைவர் கென்னத் லே ஜெயிலில் பிடித்து அடைக்கப்பட்டார். இந்திய மக்களும் காப்பாற்றப்பட்டனர்.
இப்படிப்பட்ட விலை உயர்வான பரிசோதனையை இந்திய அரசாங்கமானது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் செய்து முடித்தது. காரணம் முடிவெடுக்க வேண்டிய நிலையிலிருந்த மன்மோகன்சிங்லிருந்து மன்டேக் சிங் அலுவாலியா வரை ஏகாதிபத்திய சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு ஏற்பவர்கள். இதனால்தான் இதே போன்றதொரு பரிசோதனையை மீண்டும் நடத்த 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பதின் வாயிலாக முயற்சிக்கிறார்கள்.
சீட்டு விளையாட்டில் 'கழுதை' என்று ஒரு விளையாட்டுண்டு. ஆடுபவர்கள் தங்களிடமுள்ள கழுதைச் சீட்டை அடுத்தவரிடம் தள்ளிவிட முயற்சிப்பார். இறுதியில் யாரிடம் கழுதை அதிகமாக இருக்கிறதோ அவர் தோல்வியுறுவார். என்ரான் ஒப்பந்தமும் மீண்டும் கழுதைச் சீட்டு மாதிரி காங்கிரஸ அரசாங்த்திடமே வந்துவிட்டது. என்ரான் தன்னுடைய முதல் கட்ட நிர்மாணப் பணிகளை முடித்து மகாராஷ்ட்ர மின்வாரியத்திடம் மின்சாரத்தை விற்க ஆரம்பித்தது. அதனுடைய "மீட்டர்" ஓட ஆரம்பித்தது. இடதுசாரிகள் மீண்டும் கூக்குரலிட ஆரம்பித்தார்கள். விளைவு மகாராஷ்ட்ர அரசு கோட்போலே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்ததது.
கோட்போலே கமிட்டி அறிக்கை
என்ரானுடைய விலை நிர்ணயக் கொள்கையானது நியாயமானதல்ல, தர்க்க ரீதியாதல்ல என்ற முடிவுக்கே கோட்போலே கமிட்டி வந்தது. மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் (Power Purchase Agreement) தலைகீழ் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ர அரசு முயல வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு என்ரான் உடன்படவில்லையென்றால், என்ரான் நிறுவனம் யாருக்கு வேண்டுமானலும் மின்சாரத்தை விற்றுக் கொள்ள அனுமதி வழங்கி, மின்வாரியத்தை என்ரான் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோட்போலே கமிட்டி கூறியது. ஏழு பேர் கொண்ட கமிட்டியில் ஒரு கருத்து வேறுபாடும் நிலவியது. என்ரான் விஷயத்தில் நடந்து போன விஷயங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது என்று தெரிந்திருந்தும், கையாண்டவர்கள் ஏன் இதை அனுமதித்தனர்? இதற்குள் ஒரு மாபெரும் ஊழல் அடங்கியிருக்கிறது; எனவே இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கமிட்டியில் ஒருசாராரும், இதற்குள் சென்றால் பண்டோரா பெட்டியை திறந்த கதையாகிவிடும்; ஆகவே மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தடைபடும் என்று மற்றொரு சாரரும் பிணங்கி நின்றனர்.
கோட்போலே கமிட்டியும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியது. மின்வாரியம் இயற்கைக்கும் நடைமுறைக்கும் விதிமுறைகளுக்கும் புறம்பாக வருடத்திற்கு 930 கோடி அதிகம் செலுத்துமாறு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது என்று இடித்துரைத்தது. என்ரான் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதாக கூறியது. இயற்கை எரிவாயுவை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு ஆலையை நிர்மாணித்து அதை இயக்க வேண்டும். இதற்கான மொத்த செலவையும் மின் கொள்முதல் ஒப்பந்ததத்திற்குள் கொண்டு வந்தது. இதைத்தவிர இயற்கை எரிவாயு திரவ ஆலையை தேவையைவிட இருமடங்கு பெரிதாக நிர்மானித்து அதன் திறனில் 50 சதம் மட்டுமே மின் நிலையத்திற்கு பயன்படுத்திக் கொண்டு மீதித்திறனை இதர நிறுவனங்களுக்கு விற்று வந்தது. எனினும் மொத்த செலவையும் மின்வாரியத்திடமிருந்து வசூல் செய்து மோசடி செய்தது என்று கமிட்டி அறிவித்தது. இதைவிட இயற்கை எரிவாயுவை கையாண்டதற்கு துறைமுகச் செலவு உள்ளிட்ட மேலும் பல செலவுகளை மூலதன மீட்பு (Capital Recovery) செலவாக வசூலித்துக் கொண்டது. இறுதியாக கோட்போலே கமிட்டியானது மற்ற செலவுகளை அதிகம் தேடாமல் நேரடியாக மட்டுமே 930 கோடி அதிகம் என்ரானுக்கு செலுத்தியிருப்பதாக கூறியது. இதைத்தவிர, இயற்கை எரிவாயு சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தில் மாற்ற வேண்டும், இயங்கு பாரத்தையும் 30 - 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தமிது; சிவசேனை - பாஜக அரசால் மறுபேச்சு நடத்தி உறுதி செய்த ஒப்பந்தமானது, மீண்டும் காங்கிரஸ அரசாங்கத்தால் கையாளப்படும் போது மோசடி செய்யப்பட்ட தொகையை கையகப்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?
தொடரப்பட்ட ரிட் மனு
நமது நாட்டு சட்டப்படி ஒவ்வொரு மின்திட்டத்தையும் மத்திய மின் ஆணையம் பரிசீலித்து தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். என்ரான் விஷயத்தில் இது நடைபெறவில்லை . இதனை எதிர்த்து சிஐடியூவைச் சேர்ந்து அபய்மேத்தா மத்திய மின் ஆணையம் தன்னுடைய கடமையை செய்ய தவறிவிட்டத என்று வழக்கை தொடர்ந்தார்.
என்ரான் தூக்கிய போர்க்கொடி
கோட்போலே முடிவு தனக்கு எதிராக வரும் என்று என்ரான் நிறுவனம் "எதிர்பாராத அரசியல் நிகழ்வு" (Political Force Majure) என்று போர்க்கொடியை உயர்த்தியது. தபோல் மின்நிலையம் சம்பந்தமாக, மத்திய மாநில அரசுகளோ, தனிநபர்களோ இதர நிறுவனங்களோ இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது என்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் 10-10-2001 அன்று ஒரு தலைபட்சமான (Ex-parte) ஒரு தடையாணையை வாங்கியது. தனக்கும் மகாராஷ்ட்ர மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை இந்திய-அமெரிக்க நல்லுறவு பிரச்சனையாக மாற்றியது. இந்திய அமெரிக்க உறவு என்பது ENRON என்ற ஐந்து எழுத்தில்தான் இருக்கிறது என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பிளாக்வில் மிரட்டல் விடுத்தார். வாஜ்பாய் அரசாங்கமும் மிரட்டலுக்கு அடிபணிந்து தபோல் மின்நிலையத்தில் என்ரானின் பங்குகளை நூறு கோடி டாலருக்கும் (ரூ 4500 கோடி) அதிகமாக விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்புக் கொண்டு இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 2001 ல் வாஜ்பாய் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க பயணத்தில் கையெழுத்தாவதாக இருந்தது.
என்ரானின் மரணம்
இதற்கிடையில என்ரான் நிறுவனம் பல ஆண்டுகளாக செய்து வந்த பல மோசடிகள் அம்பலமாகி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திற்குள் சரிந்து விழுந்து விட்டது. நிறுவனம் மூடப்பட்டு பங்குதாரர்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டு விட்டது ஏனென்றால் அதன் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்து பூஜ்யத்தை எட்டிவிட்டது. இதன் தலைவர் கென்னத் லே ஜெயிலில் பிடித்து அடைக்கப்பட்டார். இந்திய மக்களும் காப்பாற்றப்பட்டனர்.
இப்படிப்பட்ட விலை உயர்வான பரிசோதனையை இந்திய அரசாங்கமானது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் செய்து முடித்தது. காரணம் முடிவெடுக்க வேண்டிய நிலையிலிருந்த மன்மோகன்சிங்லிருந்து மன்டேக் சிங் அலுவாலியா வரை ஏகாதிபத்திய சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு ஏற்பவர்கள். இதனால்தான் இதே போன்றதொரு பரிசோதனையை மீண்டும் நடத்த 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பதின் வாயிலாக முயற்சிக்கிறார்கள்.
September 25, 2007
என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-4
என்ரானை கையாண்ட மூன்றாவது மகாராஷ்ட்ர அரசு
மன்மோகன்சிங் 1991ல் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக மின்உற்பத்தி தனியார்மயமானது. இதையொட்டி மின் உற்பத்தி செய்ய தனியார்களை அனுமதிக்கும் வேகப்பாதை திட்டங்கள் (Fast Track Projects) ஆறு உருவாயின. அதில் ஒன்று தபோல் மின்திட்டம். இது என்ரான் நிறுவனத்துடன் சரத்பவார் தலைமையிலான மாநில காங்கிரஸ அரசாங்கம் செய்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தையே அடித்தளமாகக் கொண்டு 1993ல் திருத்தப்பட்ட இந்திய மின்சார சட்டம். என்ரான் ஒப்பந்தத்தின் விளைவாக அதிக விலை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை இறக்குமதி செய்வது. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலைகொடுத்து மகாராஷ்ட்ர மின்வாரியம் வாங்குவது ஆகியவை விரைவில் மின்வாரியத்தை போண்டியாக்கிவிடும் என்று கூக்குரல் எழுந்ததால், எதிர்கட்சியான சிவசேனாவும பாஜகவும் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று முழக்கமிட்டு 1994ல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஒப்பந்ததத்தை ரத்து செய்யவில்லை முதல் கட்ட பணிகள் நடைபெறுவதற்கு அனுமதித்துவிட்டு 1995ல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் முதல் கட்டம் மட்டுமின்றி இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கினார்கள். மின்கொள்முதல் ஒப்பந்ததத்திலும் எந்த மாறுதலும் செய்யவில்லை. இத்துடன் இவர்கள் ஆட்சியும் முடிந்து போயிற்று என்ரானின் முதல் கட்ட மின்நிலைய கட்டுமானப் பணிகளும் முடிந்து போயிற்று. என்ரான் மின் உற்பத்தியும் துவங்கியது. என்ரானின் மீட்டர் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கியது. 1999ல் விலாஸராவ்தேஷ்முக் தலைமையில் மீண்டும் காங்கிரஸ அரசாங்கம் உருவானது. போன சனி மீண்டும் வந்தது என்ற உணர்வுடன் மீண்டும் என்ரான் பிரச்சனை காங்கரஸிற்கே வந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானபோது கணக்கிட்டதைப் போல் ஒரு யூனிட்டிற்கு ரூ2.40 என்ரானுக்கு செலுத்த வேண்டும் என்பது பொய்யாகி யூனிட்டிற்கு ரூ7.20 செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மின்சார வாரியம் மட்டுமல்ல மகாராஷ்ட்ர அரசே போண்டியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு முதல் ஆண்டில் மட்டும் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.
போண்டியாகும் மகாராஷ்ட்ர மின்வாரியம்:
ஏற்கனவே குறிப்பிட்டபடி முதல் கட்ட மின்நிலையத்தின் உற்பத்தி திறன் 740 மெ. வாட். ஓப்பந்தப்படி அடிப்படை இயங்குபாரம் 625 மெ.வாட். உச்சகட்ட இயங்குபாரம் 695 மெ.வாட். மூலதனச் செலவானது 625 மெ.வாட் உற்பத்தி செய்தால் யூனிட்க்கு எவ்வளவு வருமோ அதையே 695 மெ. வாட் உற்பத்தி செய்த போதும் வசூல் செய்தது. சிவசேனா அரசு மறு பேச்சுவார்த்தைக்குப்பின் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டம் 489 கோடியாக குறைக்கப்பட்டது என்று வாதிட்டாலும் டாலர் விலை ரூ32 லிருந்து ரூ36 ஆக உயர்ந்ததால் நஷ்டம் ஆண்டுக்கு 551 கோடியாக உயர்ந்தது. மின்வாரியத்தின் வருமானத்தில் 52 சதமானம் 20 சதம் மின்சாரத்தை மட்டுமே கொடுத்த என்ரானுக்கே போய்ச் சேர்ந்தது. திரு பிரயாஷ் தலைமையில் இளம் நிபுணர்கள் குழு ஆராய்ந்ததில் என்ரானால் வருடத்திற்கு ரூ3000 கோடி நஷ்டம் வரும் என்று மதிப்பிடப்பட்டது. இது இரண்டாம் கட்டமும் உற்பத்தியைத் துவங்கினால் ஆண்டுக்கு ஏற்படும் ரூ1600 கோடி நஷ்டத்தையும் உள்ளடக்கியது.
மின் கொள்முதல் ஒப்பந்ததத்தில் 83 சத இயங்குபாரம் என்பதும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்ர மின்வாரியத்தின் மொத்த மின்விநியோக கொள்ளவு 7000 மெ. வாட். இரண்டடாம் கட்டம் உற்பத்தியை துவங்கினால் என்ரான் மட்டும் 2000 மெ. வாட்டிற்கு மேல் கொடுக்கும். குறைந்த கட்ட இயங்கு பாரமானது 60 சதமாக இருக்கும் பொழுது விநியோகிக்கும் மின்சாரத்தில் 50 சதத்திற்கு மேல் என்ரானுடையதாகவே இருக்கும். என்ரானுக்கு 83 சத இயங்குபாரம் கொடுக்க வேண்டுமானால் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் இதர மின்நிலையங்களை நிறுத்த வேண்டும். மறுபேச்சு வார்த்தைக்குப்பின் எரிபொருள் திரவமாக்கப்பட்ட இயற்கைவாயுவாக மாற்றப்பட்டது; இது முந்தைய எரிபொருளான நாப்தாவைவிட மலிவானது என்று வாதிடப்பட்டது. இது உண்மையே. எனினும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தேவையான துறைமுக கட்டமைப்புக்கும் அதை திரவமாக நீடித்திருக்க தேவையான கட்டமைப்புக்கும் தேவையான மூலதனம் எரிபொருள் செலவில் சேர்க்கப்படும். இது எரிபொருளை உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் கொடுக்க வேண்டும். இதன்விளைவாக மின்வாரியமானது தன்னுடைய வருமானமான ரூ12500 கோடியில் என்ரானுக்கு மட்டும் முதலாமாண்டில் மட்டும் ரூ 6500 செலுத்தியது. மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் மின்வாரியமானது தன்னுடைய 10000 மெ வாட் மின்உற்பத்தி நிலையங்களை என்ரானுக்கு கொடுக்க வேண்டியதிருக்கும்.
அன்னிய நேரடி மூலதனம் என்ரான் வழியாக வந்ததா?
மன்மோகன்சிங் சித்தாந்தப்படி இந்தியாவிற்குள் இந்த ஒப்பந்ததத்தால்அன்னிய நேரடி முலதனம் வந்ததா என்றால், சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றே சொல்ல வேண்டும். என்ரானின் இரண்டு கட்டங்களையும் சேர்த்தால் ரூ10000 கோடி மூலதனம் வருகிறது. இதில் 60 சதத்தை என்ரான் கொண்டுவந்தால் 6000 கோடி அன்னிய மூலதனம் கிடைத்திருக்கம். இதற்கு எதிராக, சர்வதேச சந்தையில் மாறிவரும் நாணய மதிப்பும் ஏறிவரும் எண்ணெய் விலையையும் சேர்த்தால் மின்நிலையத்தின் ஆயுட்காலமான 20 வருடத்தில் ரூ1,00,000 கோடி அன்னியச் செலவாணியை எரிபொருள் வாங்குவதற்கே செலவிட்டிருக்க வேண்டும். என்ரான் எதுவும் கொண்டு வரவில்லை என்பது வேறு விஷயம். நிலமை மோசமாகிக் கொண்டே போனதால் மின்வாரியமானது நஷ்டத்தை தாங்கமுடியாமல் அரசை நிர்பந்திக்க ஆரம்பித்தது. எனவே தேஷ்முக் அரசானது கோட்பாலே என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை, என்ரான் பிரச்சனை பற்றி ஆராய நியமித்தது. கோட்பாலே கமிட்டியின் கண்டுபிடிப்புகள் என்ன என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
மன்மோகன்சிங் 1991ல் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக மின்உற்பத்தி தனியார்மயமானது. இதையொட்டி மின் உற்பத்தி செய்ய தனியார்களை அனுமதிக்கும் வேகப்பாதை திட்டங்கள் (Fast Track Projects) ஆறு உருவாயின. அதில் ஒன்று தபோல் மின்திட்டம். இது என்ரான் நிறுவனத்துடன் சரத்பவார் தலைமையிலான மாநில காங்கிரஸ அரசாங்கம் செய்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தையே அடித்தளமாகக் கொண்டு 1993ல் திருத்தப்பட்ட இந்திய மின்சார சட்டம். என்ரான் ஒப்பந்தத்தின் விளைவாக அதிக விலை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை இறக்குமதி செய்வது. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலைகொடுத்து மகாராஷ்ட்ர மின்வாரியம் வாங்குவது ஆகியவை விரைவில் மின்வாரியத்தை போண்டியாக்கிவிடும் என்று கூக்குரல் எழுந்ததால், எதிர்கட்சியான சிவசேனாவும பாஜகவும் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று முழக்கமிட்டு 1994ல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஒப்பந்ததத்தை ரத்து செய்யவில்லை முதல் கட்ட பணிகள் நடைபெறுவதற்கு அனுமதித்துவிட்டு 1995ல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் முதல் கட்டம் மட்டுமின்றி இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கினார்கள். மின்கொள்முதல் ஒப்பந்ததத்திலும் எந்த மாறுதலும் செய்யவில்லை. இத்துடன் இவர்கள் ஆட்சியும் முடிந்து போயிற்று என்ரானின் முதல் கட்ட மின்நிலைய கட்டுமானப் பணிகளும் முடிந்து போயிற்று. என்ரான் மின் உற்பத்தியும் துவங்கியது. என்ரானின் மீட்டர் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கியது. 1999ல் விலாஸராவ்தேஷ்முக் தலைமையில் மீண்டும் காங்கிரஸ அரசாங்கம் உருவானது. போன சனி மீண்டும் வந்தது என்ற உணர்வுடன் மீண்டும் என்ரான் பிரச்சனை காங்கரஸிற்கே வந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானபோது கணக்கிட்டதைப் போல் ஒரு யூனிட்டிற்கு ரூ2.40 என்ரானுக்கு செலுத்த வேண்டும் என்பது பொய்யாகி யூனிட்டிற்கு ரூ7.20 செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மின்சார வாரியம் மட்டுமல்ல மகாராஷ்ட்ர அரசே போண்டியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு முதல் ஆண்டில் மட்டும் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.
போண்டியாகும் மகாராஷ்ட்ர மின்வாரியம்:
ஏற்கனவே குறிப்பிட்டபடி முதல் கட்ட மின்நிலையத்தின் உற்பத்தி திறன் 740 மெ. வாட். ஓப்பந்தப்படி அடிப்படை இயங்குபாரம் 625 மெ.வாட். உச்சகட்ட இயங்குபாரம் 695 மெ.வாட். மூலதனச் செலவானது 625 மெ.வாட் உற்பத்தி செய்தால் யூனிட்க்கு எவ்வளவு வருமோ அதையே 695 மெ. வாட் உற்பத்தி செய்த போதும் வசூல் செய்தது. சிவசேனா அரசு மறு பேச்சுவார்த்தைக்குப்பின் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டம் 489 கோடியாக குறைக்கப்பட்டது என்று வாதிட்டாலும் டாலர் விலை ரூ32 லிருந்து ரூ36 ஆக உயர்ந்ததால் நஷ்டம் ஆண்டுக்கு 551 கோடியாக உயர்ந்தது. மின்வாரியத்தின் வருமானத்தில் 52 சதமானம் 20 சதம் மின்சாரத்தை மட்டுமே கொடுத்த என்ரானுக்கே போய்ச் சேர்ந்தது. திரு பிரயாஷ் தலைமையில் இளம் நிபுணர்கள் குழு ஆராய்ந்ததில் என்ரானால் வருடத்திற்கு ரூ3000 கோடி நஷ்டம் வரும் என்று மதிப்பிடப்பட்டது. இது இரண்டாம் கட்டமும் உற்பத்தியைத் துவங்கினால் ஆண்டுக்கு ஏற்படும் ரூ1600 கோடி நஷ்டத்தையும் உள்ளடக்கியது.
மின் கொள்முதல் ஒப்பந்ததத்தில் 83 சத இயங்குபாரம் என்பதும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்ர மின்வாரியத்தின் மொத்த மின்விநியோக கொள்ளவு 7000 மெ. வாட். இரண்டடாம் கட்டம் உற்பத்தியை துவங்கினால் என்ரான் மட்டும் 2000 மெ. வாட்டிற்கு மேல் கொடுக்கும். குறைந்த கட்ட இயங்கு பாரமானது 60 சதமாக இருக்கும் பொழுது விநியோகிக்கும் மின்சாரத்தில் 50 சதத்திற்கு மேல் என்ரானுடையதாகவே இருக்கும். என்ரானுக்கு 83 சத இயங்குபாரம் கொடுக்க வேண்டுமானால் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் இதர மின்நிலையங்களை நிறுத்த வேண்டும். மறுபேச்சு வார்த்தைக்குப்பின் எரிபொருள் திரவமாக்கப்பட்ட இயற்கைவாயுவாக மாற்றப்பட்டது; இது முந்தைய எரிபொருளான நாப்தாவைவிட மலிவானது என்று வாதிடப்பட்டது. இது உண்மையே. எனினும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தேவையான துறைமுக கட்டமைப்புக்கும் அதை திரவமாக நீடித்திருக்க தேவையான கட்டமைப்புக்கும் தேவையான மூலதனம் எரிபொருள் செலவில் சேர்க்கப்படும். இது எரிபொருளை உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் கொடுக்க வேண்டும். இதன்விளைவாக மின்வாரியமானது தன்னுடைய வருமானமான ரூ12500 கோடியில் என்ரானுக்கு மட்டும் முதலாமாண்டில் மட்டும் ரூ 6500 செலுத்தியது. மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் மின்வாரியமானது தன்னுடைய 10000 மெ வாட் மின்உற்பத்தி நிலையங்களை என்ரானுக்கு கொடுக்க வேண்டியதிருக்கும்.
அன்னிய நேரடி மூலதனம் என்ரான் வழியாக வந்ததா?
மன்மோகன்சிங் சித்தாந்தப்படி இந்தியாவிற்குள் இந்த ஒப்பந்ததத்தால்அன்னிய நேரடி முலதனம் வந்ததா என்றால், சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றே சொல்ல வேண்டும். என்ரானின் இரண்டு கட்டங்களையும் சேர்த்தால் ரூ10000 கோடி மூலதனம் வருகிறது. இதில் 60 சதத்தை என்ரான் கொண்டுவந்தால் 6000 கோடி அன்னிய மூலதனம் கிடைத்திருக்கம். இதற்கு எதிராக, சர்வதேச சந்தையில் மாறிவரும் நாணய மதிப்பும் ஏறிவரும் எண்ணெய் விலையையும் சேர்த்தால் மின்நிலையத்தின் ஆயுட்காலமான 20 வருடத்தில் ரூ1,00,000 கோடி அன்னியச் செலவாணியை எரிபொருள் வாங்குவதற்கே செலவிட்டிருக்க வேண்டும். என்ரான் எதுவும் கொண்டு வரவில்லை என்பது வேறு விஷயம். நிலமை மோசமாகிக் கொண்டே போனதால் மின்வாரியமானது நஷ்டத்தை தாங்கமுடியாமல் அரசை நிர்பந்திக்க ஆரம்பித்தது. எனவே தேஷ்முக் அரசானது கோட்பாலே என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை, என்ரான் பிரச்சனை பற்றி ஆராய நியமித்தது. கோட்பாலே கமிட்டியின் கண்டுபிடிப்புகள் என்ன என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
September 21, 2007
என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-3
ஒப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா?
அரபிக்கடலில் ஒப்பந்தத்தை தூக்கி எறிவேன் என்று கூறி 1994ல் ஆட்சி வந்த சிவசேனா-பாஜக அரசானது என்ன செய்திருக்க வேண்டும்? ஓராண்டு மட்டுமே நடைபெற்ற கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவு போட்டிருக்க வேண்டும். மாறாக வேலைகள் நடைபெறுவதை அனுமதித்தது. பிறகு ஓராண்டு கழித்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறி மறுபேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தை முடிவில் முதல் கட்டம் மட்டுமல்ல இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கியது. பேச்சு வார்த்தைக்குப்பின் இரண்டாம் கட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் குறைத்ததாக கூறியது. முதல் கட்டத்தின் 695 மெவாட் மின் உற்பத்தி திறன் 826 மெ வாட் திறனாக உயர்த்தப்பட்டதாக பேசப்பட்டது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படவிருந்த இழப்பு குறைக்கப்பட்டது என்று கூறியது.
என்ரான் ஒப்பந்தம் மூலமாக காங்கிரசு அரசு ஊழல் செய்து விட்டது என்று மகாராஷ்ட்ர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக, அதிகாரம் கையில் வந்தவுடன், இந்திய அரசியல்வாதிகளுக்கு கையூட்டு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதே என்ரானுடன் மறு ஒப்பந்தம் செய்தது பாஜக. மறுபுறம் என்ரான் நிறுவனமானது இத்திட்டத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுக்கும் முடிவெடுப்பவர்களுக்கும் கல்வியூட்டிய வகையில் செலவு 20 மில்லியன் டாலர் என்று கணக்கெழுதியது; பாஜக தலைவர் அத்வானியும் என்ரான் வியாபாரப் பள்ளியைப் (Enron School of Business Management) பாராட்டிப் பேசினார்.
13ம் நாள் கூத்து
இது ஒருபுறமிருக்க, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும்போது மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசுவழங்கவேண்டும் என்று முதல் ஒப்பந்தத்தில் உள்ளது. இது மட்டுமல்ல, என்ரானுக்கு மகாராஷ்ர அரசிடமிருந்தோ, மின்வாரியத்திடமிருந்தோ ஏதாவது தொகை நிலுவையில் இருந்தால், அதை மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கிவிட்டு மகாராஷ்ட்ரா அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய வேறு நிதியிலிருந்து பிடித்துக் கொள்ளலாம் என்ற மறுபிணை ஒப்பந்தத்தை (Counter Guarantee) மத்திய அரசு என்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாமல் 1996ல் வெறும் 13 நாட்களே ஆட்சி செய்த பாஜக அரசாங்கமானது 13ம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடந்த அன்று உணவு இடைவேளையின்போது மந்திரிசபையைக் கூட்டி இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது, தீர்மானம் என்ரான் மறுபிணை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது. இரண்டாவது பெரும்பான்மையில்லாததால் ராஜினாமா செய்வது. ஆக, இன்று 123 ஒப்பந்தத்தை எதிர்க்கிறேன் என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடாமல் மூன்று நாட்கள் சபையை முடக்கியவர்களின் நோக்கம் என்ன என்பது என்ரான் விஷயத்தில் இவர்களின் நடத்தையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மோசடி பேச்சுவார்த்தை!
மறுபேச்சுவார்தைக்குப்பின் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு ஆண்டிற்கு 600 கோடியிலிருந்து 550 கோடியாக குறைந்தது போல் தோற்றம் ஏற்பட்டாலும் எரிபொருள் விலையேற்றத்தால் இதைவிட அதிகமான இழப்பே ஏற்படும். முதல் கட்ட மின்உற்பத்தித் திறனை அதிகரித்தாக கூறியதும் கணக்கில் தில்லுமுல்லு செய்து காட்டப்பட்டதே. இதுவும் கூட இருசக்கர வாகனங்கத்தை விற்பனை செய்யும் போது லிட்டருக்கு 100 கிமீ ஒடும் என்று விளப்பரம் செய்வதைப் போன்றதாகும். ஆனால் என்ரானுக்கு கிடைத்த மேலதிக சலுகை என்பது 83 சதவீத மின் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டதே. முந்தைய ஒப்பந்தத்தில் 40 சதவீதம் கொள்முதல் செய்தால் விடுபட்ட 43 சதவீத மின்சக்தியை உற்பத்தி செய்திருந்ததால் கிடைக்கும் லாபத்தை மட்டும் தண்டமாக கொடுக்க வேண்டும் ஆனால் சிவசேனா ஒப்பந்தத்தில் 43 சதவீதத்திதையும் உற்பத்தி செய்தாக கணக்கிட்டு முழுத்தொகையையும் கொடுக்க வேண்டும். இதைத்தவிர மின்வாரியம் 720 கோடி பங்கு மூலதனம் செலுவத்துவதை பெற்றதாக பெருமையுடன் கூறினார்கள் ஆனால் இந்த 720 கோடியை வைத்து 70:30 என்ற ஈவுக்கடன் பெற்று 2400 கோடியில் மொத்த மின்திட்டத்தையும் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில், மின் கொள்முதல் விலையில் எந்த மாறுதலும் இல்லை! எரிபொருள் இறக்குமதியிலும் எந்த மாறுதலும் இல்லை! பணம் டாலரில் செலுத்த வேண்டும் என்பதிலும் மாறுதல் இல்லை! விலை நிர்ணயிப்பு கொள்கையிலும் மாறுதல் இல்லை! ஆலை இயங்குபாரத்திலும் எந்த மாறுதலும் இல்லை! ஆனாலும் மறுபேச்சு வார்த்தையில் மின்வாரியத்திற்கு லாபமேற்பட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. பிறகென்ன மின்வாரியம் போண்டியாக வேண்டியதுதான்! மின்வாரியம் எப்படி பாதாளத்திற்குள் சென்றது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
அரபிக்கடலில் ஒப்பந்தத்தை தூக்கி எறிவேன் என்று கூறி 1994ல் ஆட்சி வந்த சிவசேனா-பாஜக அரசானது என்ன செய்திருக்க வேண்டும்? ஓராண்டு மட்டுமே நடைபெற்ற கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவு போட்டிருக்க வேண்டும். மாறாக வேலைகள் நடைபெறுவதை அனுமதித்தது. பிறகு ஓராண்டு கழித்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறி மறுபேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தை முடிவில் முதல் கட்டம் மட்டுமல்ல இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கியது. பேச்சு வார்த்தைக்குப்பின் இரண்டாம் கட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் குறைத்ததாக கூறியது. முதல் கட்டத்தின் 695 மெவாட் மின் உற்பத்தி திறன் 826 மெ வாட் திறனாக உயர்த்தப்பட்டதாக பேசப்பட்டது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படவிருந்த இழப்பு குறைக்கப்பட்டது என்று கூறியது.
என்ரான் ஒப்பந்தம் மூலமாக காங்கிரசு அரசு ஊழல் செய்து விட்டது என்று மகாராஷ்ட்ர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக, அதிகாரம் கையில் வந்தவுடன், இந்திய அரசியல்வாதிகளுக்கு கையூட்டு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதே என்ரானுடன் மறு ஒப்பந்தம் செய்தது பாஜக. மறுபுறம் என்ரான் நிறுவனமானது இத்திட்டத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுக்கும் முடிவெடுப்பவர்களுக்கும் கல்வியூட்டிய வகையில் செலவு 20 மில்லியன் டாலர் என்று கணக்கெழுதியது; பாஜக தலைவர் அத்வானியும் என்ரான் வியாபாரப் பள்ளியைப் (Enron School of Business Management) பாராட்டிப் பேசினார்.
13ம் நாள் கூத்து
இது ஒருபுறமிருக்க, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும்போது மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசுவழங்கவேண்டும் என்று முதல் ஒப்பந்தத்தில் உள்ளது. இது மட்டுமல்ல, என்ரானுக்கு மகாராஷ்ர அரசிடமிருந்தோ, மின்வாரியத்திடமிருந்தோ ஏதாவது தொகை நிலுவையில் இருந்தால், அதை மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கிவிட்டு மகாராஷ்ட்ரா அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய வேறு நிதியிலிருந்து பிடித்துக் கொள்ளலாம் என்ற மறுபிணை ஒப்பந்தத்தை (Counter Guarantee) மத்திய அரசு என்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாமல் 1996ல் வெறும் 13 நாட்களே ஆட்சி செய்த பாஜக அரசாங்கமானது 13ம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடந்த அன்று உணவு இடைவேளையின்போது மந்திரிசபையைக் கூட்டி இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது, தீர்மானம் என்ரான் மறுபிணை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது. இரண்டாவது பெரும்பான்மையில்லாததால் ராஜினாமா செய்வது. ஆக, இன்று 123 ஒப்பந்தத்தை எதிர்க்கிறேன் என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடாமல் மூன்று நாட்கள் சபையை முடக்கியவர்களின் நோக்கம் என்ன என்பது என்ரான் விஷயத்தில் இவர்களின் நடத்தையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மோசடி பேச்சுவார்த்தை!
மறுபேச்சுவார்தைக்குப்பின் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு ஆண்டிற்கு 600 கோடியிலிருந்து 550 கோடியாக குறைந்தது போல் தோற்றம் ஏற்பட்டாலும் எரிபொருள் விலையேற்றத்தால் இதைவிட அதிகமான இழப்பே ஏற்படும். முதல் கட்ட மின்உற்பத்தித் திறனை அதிகரித்தாக கூறியதும் கணக்கில் தில்லுமுல்லு செய்து காட்டப்பட்டதே. இதுவும் கூட இருசக்கர வாகனங்கத்தை விற்பனை செய்யும் போது லிட்டருக்கு 100 கிமீ ஒடும் என்று விளப்பரம் செய்வதைப் போன்றதாகும். ஆனால் என்ரானுக்கு கிடைத்த மேலதிக சலுகை என்பது 83 சதவீத மின் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டதே. முந்தைய ஒப்பந்தத்தில் 40 சதவீதம் கொள்முதல் செய்தால் விடுபட்ட 43 சதவீத மின்சக்தியை உற்பத்தி செய்திருந்ததால் கிடைக்கும் லாபத்தை மட்டும் தண்டமாக கொடுக்க வேண்டும் ஆனால் சிவசேனா ஒப்பந்தத்தில் 43 சதவீதத்திதையும் உற்பத்தி செய்தாக கணக்கிட்டு முழுத்தொகையையும் கொடுக்க வேண்டும். இதைத்தவிர மின்வாரியம் 720 கோடி பங்கு மூலதனம் செலுவத்துவதை பெற்றதாக பெருமையுடன் கூறினார்கள் ஆனால் இந்த 720 கோடியை வைத்து 70:30 என்ற ஈவுக்கடன் பெற்று 2400 கோடியில் மொத்த மின்திட்டத்தையும் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில், மின் கொள்முதல் விலையில் எந்த மாறுதலும் இல்லை! எரிபொருள் இறக்குமதியிலும் எந்த மாறுதலும் இல்லை! பணம் டாலரில் செலுத்த வேண்டும் என்பதிலும் மாறுதல் இல்லை! விலை நிர்ணயிப்பு கொள்கையிலும் மாறுதல் இல்லை! ஆலை இயங்குபாரத்திலும் எந்த மாறுதலும் இல்லை! ஆனாலும் மறுபேச்சு வார்த்தையில் மின்வாரியத்திற்கு லாபமேற்பட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. பிறகென்ன மின்வாரியம் போண்டியாக வேண்டியதுதான்! மின்வாரியம் எப்படி பாதாளத்திற்குள் சென்றது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
September 18, 2007
என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-2
புதிய மின்சக்தி கொள்கை:
என்ரானுக்காக மத்திய மின் உற்பத்தி சட்டம் திருத்தப்பட்டது. மின் உற்பத்திக் கொள்கைகளை திருத்துவதற்காக மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் தலைவர் டாக்டர் ரெயின்ஹார்ட் என்பவர். உலகில் மொத்தமுள்ள ஆறு மின் தளவாட உற்பத்தியார்களில் ஒன்றான சீமென்ஸ நிறுவனத்தின் இந்திய அதிகாரியே ரெயின்ஹார்ட். இவர் கூறிய பரிந்துரைகள் தனியார் மயத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டாம். கீழ்க்காணும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. உலகிலுள்ள மின்தளவாட உற்பத்தித் திறனானது ஆண்டிற்கு 1,25,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பதிலிருந்து 1,50,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பது வரை. ஆனால் ஆண்டிற்கு தேவைப்படும் மின் உற்பத்தி தளவாடங்கள் 5000 மெ வாட்டிலிருந்து 10000 மெ வாட் வரைதான். இதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. சீனா தன்னுடைய சாதகமான நிலையைப் பயன்படுத்தி கடுமையாக பேரம் நடத்தி விலைகுறைப்பை ஏற்படுத்தும் போது இந்தியா அன்னிய மின் தளவாட உற்பத்தியாளர்களுக்கு வேட்டைக் காடாக மாறிவிட்டது.
ஒருவழியாக மின்உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டது. தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் மின்சக்தி கொள்கை மாற்றப்பட்டது.
• தனியார் இடும் மூலதனத்திற்கு 16 சதம் லாபம் உத்தரவாதம்
• நீண்டகால வரி விடுமுறை
• கணக்கில் காட்டப்படும் தேய்மானம் 3.5 சதத்திலிருந்து 8.24 சதமாக உயர்வு
• அன்னியச் செலவாணி தடுமாற்றத்திலிருந்து பாதுகாப்பு
• தனியாக மின்கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement). இதில் நிரந்தர மூலதனத்தின் வட்டி, திருப்பி செலுத்துதல், இயங்கு மூலதனத்தின் வட்டி மற்றும் லாபம் ஆகியவை தனித்தனியாக உள்ளடக்கப்பட வேண்டும்
• எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி
• மின்சாரம் உற்பத்தியும் நுகர்வும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால் தேவையில்லாத நேரத்தில் கூட ஆலையை இயக்கி இயங்குதிறனில் அதிக அளவு வரும் அளவிற்கு மின்சாரம் வாங்க வேண்டும்.
இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் என்ரான் ஒப்பந்தம் போடப்பட்டது. இதே போன்று சில கொள்கைகள் அணுமின்நிலைய தனியார்மயம், அணுஉலை இறக்குமதி, எரிபொருள் வழங்கல் போன்றவைகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் இந்த கொள்கைகளை மீறி மேலும் சில சலுகைகள் என்ரானுக்கு வழங்கப்பட்டது. அது என்னவென்று பார்ப்போம்.
என்ரானின் மின்கொள்முதல் ஒப்பந்தம்:
என்ரானுக்கு 31 சதம் லாபம் உத்தரவாதம் தரப்பட்டது. 16 சதம் நேரடியான லாபம், 15 சதம் ஆலை இயங்குபார ஊக்கத்தொகை (Plant Load Factor) ஆகிய வடிவில் 31 சதமாக்கப்பட்டது. ஐந்து வருடத்திற்கு வரி விடுமுறை. மின்கொள்முதல் அன்னியச் செலவாணியில் கொடுக்க வேண்டும். மின் உற்பத்தி செய்வதற்கு கிராக்கியான எரிபொருளான எரிவாயுவைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் அதிக இயக்கச் செலவையும் மராட்டிய அரசுதான் கொடுக்க வேண்டும். இதையேதான் என்ரான் செய்தது. சர்வதேச சந்தையில் பீப்பாய் 10 டாலருக்க விற்றுக் கொண்டிருந்த கச்சா எண்ணெயின் விலை 30டாலராக உயர்ந்த பொழுது 3 மடங்கு என்ரான் மின்சாரத்திற்கு விலை கொடுக்க வேண்டியதிருந்து. இதன் விளைவாக என்ரான் மின்சாரத்தின் விலை ரூ3 லிருந்து ரூ4 ஆக ஆகிவிட்டது. டாலர் மதிப்பு 31.50 இருந்தபொழுது போட்ட ஒப்பந்தம், டாலர் மதிப்பு 40 ரூபாயாக உயர்ந்த பொழுது அதற்கும் சேர்த்து மின்சக்தி விலை கொடுக்க வேண்டியதிருந்தது.. 2002ல் டாலர் மதிப்பு உயர்ந்ததன் விளைவாக இது ரூ5 லிருந்து ரூ 7 ஆக உயர்ந்து விட்டது.மராட்டிய அரசின் இதர மின்நிலையங்கள் 60 சதத்தில் இயக்கும் பொழுது என்ரானுக்கு 83 சதம் இயக்கி அதன் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. பொதுவாக எந்தவொரு தொழிலின் லாப நட்டத்தை அதன் திறமையும் சந்தையுமே தீர்மானிக்கும், அரசு தலையிடக்கூடாது என்ற சந்தைப் பொருளாதார சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு தலையிட்டு 31 சத லாபம் உத்தரவாதம் செய்வதுதான் பெரிய நகைமுரண்.
இப்படிப்பட்ட மோசடியான விஷயத்தை என்ரான் எதிர்ப்பாளர்கள் மக்களிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றது. மகாராஷ்ட்ர தேர்தல் வேறு நெருங்கி வந்தது. உடனே எதிர்க்கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் களத்தில் குதித்தன. ஆட்சிக்கு வந்த உடனே என்ரான் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசி எறிவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தனர். தேர்தலிலும வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஓப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா? அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
என்ரானுக்காக மத்திய மின் உற்பத்தி சட்டம் திருத்தப்பட்டது. மின் உற்பத்திக் கொள்கைகளை திருத்துவதற்காக மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் தலைவர் டாக்டர் ரெயின்ஹார்ட் என்பவர். உலகில் மொத்தமுள்ள ஆறு மின் தளவாட உற்பத்தியார்களில் ஒன்றான சீமென்ஸ நிறுவனத்தின் இந்திய அதிகாரியே ரெயின்ஹார்ட். இவர் கூறிய பரிந்துரைகள் தனியார் மயத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டாம். கீழ்க்காணும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. உலகிலுள்ள மின்தளவாட உற்பத்தித் திறனானது ஆண்டிற்கு 1,25,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பதிலிருந்து 1,50,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பது வரை. ஆனால் ஆண்டிற்கு தேவைப்படும் மின் உற்பத்தி தளவாடங்கள் 5000 மெ வாட்டிலிருந்து 10000 மெ வாட் வரைதான். இதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. சீனா தன்னுடைய சாதகமான நிலையைப் பயன்படுத்தி கடுமையாக பேரம் நடத்தி விலைகுறைப்பை ஏற்படுத்தும் போது இந்தியா அன்னிய மின் தளவாட உற்பத்தியாளர்களுக்கு வேட்டைக் காடாக மாறிவிட்டது.
ஒருவழியாக மின்உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டது. தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் மின்சக்தி கொள்கை மாற்றப்பட்டது.
• தனியார் இடும் மூலதனத்திற்கு 16 சதம் லாபம் உத்தரவாதம்
• நீண்டகால வரி விடுமுறை
• கணக்கில் காட்டப்படும் தேய்மானம் 3.5 சதத்திலிருந்து 8.24 சதமாக உயர்வு
• அன்னியச் செலவாணி தடுமாற்றத்திலிருந்து பாதுகாப்பு
• தனியாக மின்கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement). இதில் நிரந்தர மூலதனத்தின் வட்டி, திருப்பி செலுத்துதல், இயங்கு மூலதனத்தின் வட்டி மற்றும் லாபம் ஆகியவை தனித்தனியாக உள்ளடக்கப்பட வேண்டும்
• எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி
• மின்சாரம் உற்பத்தியும் நுகர்வும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால் தேவையில்லாத நேரத்தில் கூட ஆலையை இயக்கி இயங்குதிறனில் அதிக அளவு வரும் அளவிற்கு மின்சாரம் வாங்க வேண்டும்.
இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் என்ரான் ஒப்பந்தம் போடப்பட்டது. இதே போன்று சில கொள்கைகள் அணுமின்நிலைய தனியார்மயம், அணுஉலை இறக்குமதி, எரிபொருள் வழங்கல் போன்றவைகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் இந்த கொள்கைகளை மீறி மேலும் சில சலுகைகள் என்ரானுக்கு வழங்கப்பட்டது. அது என்னவென்று பார்ப்போம்.
என்ரானின் மின்கொள்முதல் ஒப்பந்தம்:
என்ரானுக்கு 31 சதம் லாபம் உத்தரவாதம் தரப்பட்டது. 16 சதம் நேரடியான லாபம், 15 சதம் ஆலை இயங்குபார ஊக்கத்தொகை (Plant Load Factor) ஆகிய வடிவில் 31 சதமாக்கப்பட்டது. ஐந்து வருடத்திற்கு வரி விடுமுறை. மின்கொள்முதல் அன்னியச் செலவாணியில் கொடுக்க வேண்டும். மின் உற்பத்தி செய்வதற்கு கிராக்கியான எரிபொருளான எரிவாயுவைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் அதிக இயக்கச் செலவையும் மராட்டிய அரசுதான் கொடுக்க வேண்டும். இதையேதான் என்ரான் செய்தது. சர்வதேச சந்தையில் பீப்பாய் 10 டாலருக்க விற்றுக் கொண்டிருந்த கச்சா எண்ணெயின் விலை 30டாலராக உயர்ந்த பொழுது 3 மடங்கு என்ரான் மின்சாரத்திற்கு விலை கொடுக்க வேண்டியதிருந்து. இதன் விளைவாக என்ரான் மின்சாரத்தின் விலை ரூ3 லிருந்து ரூ4 ஆக ஆகிவிட்டது. டாலர் மதிப்பு 31.50 இருந்தபொழுது போட்ட ஒப்பந்தம், டாலர் மதிப்பு 40 ரூபாயாக உயர்ந்த பொழுது அதற்கும் சேர்த்து மின்சக்தி விலை கொடுக்க வேண்டியதிருந்தது.. 2002ல் டாலர் மதிப்பு உயர்ந்ததன் விளைவாக இது ரூ5 லிருந்து ரூ 7 ஆக உயர்ந்து விட்டது.மராட்டிய அரசின் இதர மின்நிலையங்கள் 60 சதத்தில் இயக்கும் பொழுது என்ரானுக்கு 83 சதம் இயக்கி அதன் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. பொதுவாக எந்தவொரு தொழிலின் லாப நட்டத்தை அதன் திறமையும் சந்தையுமே தீர்மானிக்கும், அரசு தலையிடக்கூடாது என்ற சந்தைப் பொருளாதார சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு தலையிட்டு 31 சத லாபம் உத்தரவாதம் செய்வதுதான் பெரிய நகைமுரண்.
இப்படிப்பட்ட மோசடியான விஷயத்தை என்ரான் எதிர்ப்பாளர்கள் மக்களிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றது. மகாராஷ்ட்ர தேர்தல் வேறு நெருங்கி வந்தது. உடனே எதிர்க்கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் களத்தில் குதித்தன. ஆட்சிக்கு வந்த உடனே என்ரான் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசி எறிவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தனர். தேர்தலிலும வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஓப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா? அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
September 15, 2007
என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-1
ட்ராஜன் குதிரை:
இந்த இரு ஒப்பந்தங்களுக்கும் ஒத்த தன்மைகள் பல உள்ளன. இன்னும் சொல்லப் போனால் 1991ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்திக் கொள்கைக்கும் 123 ஒப்பந்தத்திற்கும்தான் ஒத்த தன்மைகள் உள்ளன. ஏனென்றால் முதலாவது விஷயம் என்ரான் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. இரண்டாவது அதைப் போன்று இன்னொன்று வரவிருப்பதை அறிவிக்கிறது.
கிரேக்க புராணக்கதையான இல்லியட்டின் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது நல்லது. ஜீயெஜ் என்ற கடவுளானவர் தன்னுடைய மகளான காஸண்டிரியாவிற்கு நடக்ககூடியதை முன்கூட்டியே கூறும் ஆற்றல் உண்டாகட்டும் என்ற ஒரு வரம் கொடுத்தார். ஆனால் ஜீயெஜின் மனைவி ஹீரா, அதாவது காஸண்டிரியாவின் அம்மா ஒரு சாபம் கொடுத்தார். அதாவது நடக்கக் கூடியதை முன்கூட்டியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதே! ட்ராய் என்ற பொய்க்கால் குதிரைக்குள் எதிரிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து காஸண்டிரியா சொன்னாலும் அதை நம்பாத ட்ராஜன்கள் அதனுள்ளே சென்று மாண்டார்கள். இதுதான் என்ரான் விஷயத்தில் நடந்தது. என்ரான் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு காஸண்டிரியா நிலமை ஏற்பட்டது. அவர்கள் 1992ல் கூறியதை யாரும் நம்பவில்லை. 2001ல் உண்மை என்று நிரூபணம்ஆகிவிட்டது.
நாய்வாலை நறுக்கி சூப்பு போட்டு நாய்க்கே கொடுத்தது:
1980களில் வேகமடைந்த ரீகனாமிக்ஸின் விளைவாக தனியார்மயம் சூடுபிடித்தது. மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை தனியார்மயத்திற்கு உட்படுத்தப்பட்டது. மின்சக்தி உற்பத்தியாளர்கள், மின் விநியோக ஏற்பாடு உடையவர்கள், விநியோகிப்பவர்கள் ஆகிய முவருக்கும் தனியார்கள். விநியோகிப்பவர் என்பவர் வெவ்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் மின்சக்தியை ஒப்பந்தம் மூலமாக மொத்தமாக வாங்கி நுகர்வோருக்கு சில்லரை விலையில் விற்பவர். நம்மவூர் மருந்துக்கடைக்காரருக்கு மருந்து உற்பத்தி பற்றி எவ்வளவு அறிவு இருக்குமோ அதே அறிவுதான் மின் விநியோகிப்பாளருக்கு மின் உற்பத்தியைப்பற்றிய அறிவு இருக்கும்.அன்று மின்சக்தி விநியோகிக்கும் நிறுவனமாக முளைத்ததுதான் என்ரான். வெகுவேகமாக என்ரான் வளர்ந்ததற்கு காரணம் அது மின்சக்தி விநியோகித்தில் ஊகவணிகமுறையை (Speculation) புகுத்தியதே. ஃப்யூச்சர் என சொல்லப்படும் ஊகவணிக முறையில் மின்சக்தியை உற்பத்தியாளர்களுடன் எதிர்கால விலை ஒப்பந்தத்தைப் போட்டு லாபம் சம்பாதித்தது. என்ரானுக்கு எந்தவித மின் உற்பத்தி அனுபவமும் கிடையாது.
இப்படிப்பட்ட மகானுபாவனுடன்தான் மன்மோகன்சிங் (மத்திய நிதியமைச்சர்), சால்வே (மின்துறை அமைச்சர்), அலுவாலியா (மத்திய நிதிச் செயலர்) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சரத்பவாரின் மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்தது. இது எரிவாயுவை பயன்படுத்தி 2015 மெ வாட் மின்நிலையத்தை மகாராஷ்டிர மாநிலம் தபோலில் அமைக்கும் ஓப்பந்தம். மின்நிலையத்தின் மொத்த விலை 2850 மில்லியன் டாலர். இதில் 2000 மில்லியன் டாலர் இந்திய நிதி நிறுவனங்களான IDBI, IFCI, SBI ஆகியவை கடனாகக் கொடுக்கும். 910 மில்லியன் டாலர் செலவில் முதல் கட்ட மின்நிலையம் உருவாகும். என்ரானுக்கு மின் உற்பத்தி அனுபவம் இல்லாதால், மின்நிலைய உபகரணத் தயாரிப்பாளரான GEக்கு10 சதவீத பங்கும், மின்நிலைய வடிவமைப்பாளரான Bechtel நிறுவனத்திற்கு 10 சதவீத பங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக யாருக்கும் மின் உற்பத்தி நிலையம் நடத்திய அனுபவம் கிடையாது. முதல் கட்ட 910 மி டாலரில் 200 மி. டாலர் என்ரான் பங்கும் இந்திய நிதி நிறுவனங்கள் 710 மி டாலர் கடன் கொடுக்கும் ஆனால் மொத்த ஆலைக்கான வடிவமைப்புச் செலவான 280 மி டாலர் ஒப்பந்தம் போட்டவுடனே எடுத்துக் கொண்டுவிடும் ஆக மொத்தம் கையெழுத்தானவுடன் 80 மி டாலர் வரவு. அதாவது 252 கோடி ரூபாய் லாபம் ஒன்றும் கொடுக்காமலேயே! நமக்கு மின்உற்பத்தி செய்து விற்பதற்கு சொந்த முதலீட்டில் மின் உற்பத்தி நிலையம் என்று கூறி ஒப்பந்தம் போட்டு 252 கோடி சம்பாதித்தது என்ரான். நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு போட்டு கொடுத்த கதைதான் இது. இந்த ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகள் எவை? ஓப்பந்தம் எவ்வாறு அமலானது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
இந்த இரு ஒப்பந்தங்களுக்கும் ஒத்த தன்மைகள் பல உள்ளன. இன்னும் சொல்லப் போனால் 1991ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்திக் கொள்கைக்கும் 123 ஒப்பந்தத்திற்கும்தான் ஒத்த தன்மைகள் உள்ளன. ஏனென்றால் முதலாவது விஷயம் என்ரான் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. இரண்டாவது அதைப் போன்று இன்னொன்று வரவிருப்பதை அறிவிக்கிறது.
கிரேக்க புராணக்கதையான இல்லியட்டின் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது நல்லது. ஜீயெஜ் என்ற கடவுளானவர் தன்னுடைய மகளான காஸண்டிரியாவிற்கு நடக்ககூடியதை முன்கூட்டியே கூறும் ஆற்றல் உண்டாகட்டும் என்ற ஒரு வரம் கொடுத்தார். ஆனால் ஜீயெஜின் மனைவி ஹீரா, அதாவது காஸண்டிரியாவின் அம்மா ஒரு சாபம் கொடுத்தார். அதாவது நடக்கக் கூடியதை முன்கூட்டியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதே! ட்ராய் என்ற பொய்க்கால் குதிரைக்குள் எதிரிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து காஸண்டிரியா சொன்னாலும் அதை நம்பாத ட்ராஜன்கள் அதனுள்ளே சென்று மாண்டார்கள். இதுதான் என்ரான் விஷயத்தில் நடந்தது. என்ரான் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு காஸண்டிரியா நிலமை ஏற்பட்டது. அவர்கள் 1992ல் கூறியதை யாரும் நம்பவில்லை. 2001ல் உண்மை என்று நிரூபணம்ஆகிவிட்டது.
நாய்வாலை நறுக்கி சூப்பு போட்டு நாய்க்கே கொடுத்தது:
1980களில் வேகமடைந்த ரீகனாமிக்ஸின் விளைவாக தனியார்மயம் சூடுபிடித்தது. மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை தனியார்மயத்திற்கு உட்படுத்தப்பட்டது. மின்சக்தி உற்பத்தியாளர்கள், மின் விநியோக ஏற்பாடு உடையவர்கள், விநியோகிப்பவர்கள் ஆகிய முவருக்கும் தனியார்கள். விநியோகிப்பவர் என்பவர் வெவ்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் மின்சக்தியை ஒப்பந்தம் மூலமாக மொத்தமாக வாங்கி நுகர்வோருக்கு சில்லரை விலையில் விற்பவர். நம்மவூர் மருந்துக்கடைக்காரருக்கு மருந்து உற்பத்தி பற்றி எவ்வளவு அறிவு இருக்குமோ அதே அறிவுதான் மின் விநியோகிப்பாளருக்கு மின் உற்பத்தியைப்பற்றிய அறிவு இருக்கும்.அன்று மின்சக்தி விநியோகிக்கும் நிறுவனமாக முளைத்ததுதான் என்ரான். வெகுவேகமாக என்ரான் வளர்ந்ததற்கு காரணம் அது மின்சக்தி விநியோகித்தில் ஊகவணிகமுறையை (Speculation) புகுத்தியதே. ஃப்யூச்சர் என சொல்லப்படும் ஊகவணிக முறையில் மின்சக்தியை உற்பத்தியாளர்களுடன் எதிர்கால விலை ஒப்பந்தத்தைப் போட்டு லாபம் சம்பாதித்தது. என்ரானுக்கு எந்தவித மின் உற்பத்தி அனுபவமும் கிடையாது.
இப்படிப்பட்ட மகானுபாவனுடன்தான் மன்மோகன்சிங் (மத்திய நிதியமைச்சர்), சால்வே (மின்துறை அமைச்சர்), அலுவாலியா (மத்திய நிதிச் செயலர்) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சரத்பவாரின் மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்தது. இது எரிவாயுவை பயன்படுத்தி 2015 மெ வாட் மின்நிலையத்தை மகாராஷ்டிர மாநிலம் தபோலில் அமைக்கும் ஓப்பந்தம். மின்நிலையத்தின் மொத்த விலை 2850 மில்லியன் டாலர். இதில் 2000 மில்லியன் டாலர் இந்திய நிதி நிறுவனங்களான IDBI, IFCI, SBI ஆகியவை கடனாகக் கொடுக்கும். 910 மில்லியன் டாலர் செலவில் முதல் கட்ட மின்நிலையம் உருவாகும். என்ரானுக்கு மின் உற்பத்தி அனுபவம் இல்லாதால், மின்நிலைய உபகரணத் தயாரிப்பாளரான GEக்கு10 சதவீத பங்கும், மின்நிலைய வடிவமைப்பாளரான Bechtel நிறுவனத்திற்கு 10 சதவீத பங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக யாருக்கும் மின் உற்பத்தி நிலையம் நடத்திய அனுபவம் கிடையாது. முதல் கட்ட 910 மி டாலரில் 200 மி. டாலர் என்ரான் பங்கும் இந்திய நிதி நிறுவனங்கள் 710 மி டாலர் கடன் கொடுக்கும் ஆனால் மொத்த ஆலைக்கான வடிவமைப்புச் செலவான 280 மி டாலர் ஒப்பந்தம் போட்டவுடனே எடுத்துக் கொண்டுவிடும் ஆக மொத்தம் கையெழுத்தானவுடன் 80 மி டாலர் வரவு. அதாவது 252 கோடி ரூபாய் லாபம் ஒன்றும் கொடுக்காமலேயே! நமக்கு மின்உற்பத்தி செய்து விற்பதற்கு சொந்த முதலீட்டில் மின் உற்பத்தி நிலையம் என்று கூறி ஒப்பந்தம் போட்டு 252 கோடி சம்பாதித்தது என்ரான். நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு போட்டு கொடுத்த கதைதான் இது. இந்த ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகள் எவை? ஓப்பந்தம் எவ்வாறு அமலானது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
September 14, 2007
மன்மோகன் சிங்கின் சித்தாந்தப் பிடிப்பு!
உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டாமா?
தவறு செய்தவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் நடந்த தவற்றால் எந்த பாடமும் கற்காதவர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவருடைய அதிகார வர்க்க ஆலோசகர் மான்டேக் சிங் அலுவாலியா. தற்போது 123 ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துவிட்டு, ஆட்சி போனாலும் பரவாயில்லை ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சூளுரைக்கும் மன்மோகன்சிங், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இன்னொரு என்ரான் உருவாகப்போகிறது என்று தெரிந்தேதான் செய்கிறார். ஏனென்றால் என்ரான் ஒப்பந்தத்தின் மூலகர்த்தா இவர்களே!
1000 மெ. வாட் அணு உலையானது 10000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து ஆண்டுக்கு 50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்து வருடத்திற்கு வட்டிம் முதலுமாக 2000 கோடி செலுத்த வேண்டுமானால் ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் மூலதனச் செலவு மட்டுமே ஆகிறது. இதன் பிறகு எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இயக்கச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தால் யூனிட் மின்சாரத்தின் விலை 7 ரூபாய் அடக்கவிலையாகும். மின் இழப்பு, லாபம், இயக்க மூலதன வட்டி, காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்தால் 8 ரூபாய் என்றால் இது கட்டுப்படியாகக் கூடிய விஷயமா? இதுதான் 123 ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் நடக்கப் போகிறது.
இந்தியாவை மொட்டையடிக்க காத்திருக்கும் நிறுவனங்கள்
அமெரிக்காவின் GE நிறுவனம் அல்லது Westinghouse நிறுவனம் தங்களுடைய அணுஉலைகளை வாங்குவதற்கு ஆள்கிடைக்கதாதால் புஷ் அரசை நிர்பந்தப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்து, குறைந்தது 10000 மெ. வாட் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.
நஷ்டத்தை சிரமேற்கொண்டு ஏற்கும் சித்தாந்த அரசியல்!
அதாவது இந்தியா ஒருலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு அதை இயக்கத் தேவையான எரிபொருளுக்கும் அமெரிக்காவின் தயவுக்காக காத்திருந்து, இயக்கும் தினந்தோறும் நஷ்டத்தை உற்பத்தி செய்து எரிபொருள் தரமுடியாது என்றால் போட்ட முதல் ஒரு லட்சம் கோடியும் வீண் என்ற முடிவை பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் கூட எடுக்க மாட்டார். பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங்கால் மட்டுமே இப்படிப்பட்ட முடிவை எடுக்க முடியும், ஏனென்றால் இது மன்மோகன்சிங்கைப் பொருத்தவரை சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயம். தனியார்மயம், தராளமயம், அன்னிய மூலதனம் இவையே அவரின் குறிக்கோள். இதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை செய்தே தீருவது என்பதே இவரின் சித்தாந்தப் பிடிப்பு. இதே போன்ற முடிவை 1992ம் ஆண்டு என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மராட்டிய மாநிலத்தில் 2015 மெ வாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்தவர்.
இவரை ஒத்த சித்தாந்தப் பிடிப்புடைய இன்னொரு அரசியல்வாதி அருண்சௌரி. இவரும் மாடன்பிரட் நிறுவனத்தை 106 கோடிக்கு ஹிந்துஸதான் லீவர் நிறுவனத்திற்கு விற்றார். ஆனால் அதன் சொத்து மதிப்பு 2200 கோடி. 5500 கோடி மதிப்புள்ள பால்கோ நிறுவனத்தை வெறும் 551 கோடிக்கு ஸடெரிலைட் நிறுவனத்திற்கு விற்றார். கஜானாவில் 5000 கோடியை வைத்து விஎஸஎன்எல் நிறுவனத்தை 1400 கோடிக்கு டாடாவிடம் விற்றார். மும்பை விமான நிலைய சென்டூர் ஹோட்டலை பாத்ரா என்பவருக்கு 83 கோடிக்கு விற்றார். அவர் அடுத்தமாதம் அதை 115 கோடிக்கு இன்னொருவரிடம் விற்றார். இதிலெல்லாம் ஊழல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், இதற்கு மூலகாரணமான தனியார்மய சித்தாந்தம் என்பதே இங்கு முக்கியமானது. இதற்கு பிள்ளையார் சுழி என்ரான் ஒப்பந்தம் மூலமாக போடப்பட்டது. என்ரான் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
தவறு செய்தவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் நடந்த தவற்றால் எந்த பாடமும் கற்காதவர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவருடைய அதிகார வர்க்க ஆலோசகர் மான்டேக் சிங் அலுவாலியா. தற்போது 123 ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துவிட்டு, ஆட்சி போனாலும் பரவாயில்லை ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சூளுரைக்கும் மன்மோகன்சிங், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இன்னொரு என்ரான் உருவாகப்போகிறது என்று தெரிந்தேதான் செய்கிறார். ஏனென்றால் என்ரான் ஒப்பந்தத்தின் மூலகர்த்தா இவர்களே!
1000 மெ. வாட் அணு உலையானது 10000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து ஆண்டுக்கு 50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்து வருடத்திற்கு வட்டிம் முதலுமாக 2000 கோடி செலுத்த வேண்டுமானால் ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் மூலதனச் செலவு மட்டுமே ஆகிறது. இதன் பிறகு எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இயக்கச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தால் யூனிட் மின்சாரத்தின் விலை 7 ரூபாய் அடக்கவிலையாகும். மின் இழப்பு, லாபம், இயக்க மூலதன வட்டி, காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்தால் 8 ரூபாய் என்றால் இது கட்டுப்படியாகக் கூடிய விஷயமா? இதுதான் 123 ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் நடக்கப் போகிறது.
இந்தியாவை மொட்டையடிக்க காத்திருக்கும் நிறுவனங்கள்
அமெரிக்காவின் GE நிறுவனம் அல்லது Westinghouse நிறுவனம் தங்களுடைய அணுஉலைகளை வாங்குவதற்கு ஆள்கிடைக்கதாதால் புஷ் அரசை நிர்பந்தப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்து, குறைந்தது 10000 மெ. வாட் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.
நஷ்டத்தை சிரமேற்கொண்டு ஏற்கும் சித்தாந்த அரசியல்!
அதாவது இந்தியா ஒருலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு அதை இயக்கத் தேவையான எரிபொருளுக்கும் அமெரிக்காவின் தயவுக்காக காத்திருந்து, இயக்கும் தினந்தோறும் நஷ்டத்தை உற்பத்தி செய்து எரிபொருள் தரமுடியாது என்றால் போட்ட முதல் ஒரு லட்சம் கோடியும் வீண் என்ற முடிவை பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் கூட எடுக்க மாட்டார். பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங்கால் மட்டுமே இப்படிப்பட்ட முடிவை எடுக்க முடியும், ஏனென்றால் இது மன்மோகன்சிங்கைப் பொருத்தவரை சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயம். தனியார்மயம், தராளமயம், அன்னிய மூலதனம் இவையே அவரின் குறிக்கோள். இதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை செய்தே தீருவது என்பதே இவரின் சித்தாந்தப் பிடிப்பு. இதே போன்ற முடிவை 1992ம் ஆண்டு என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மராட்டிய மாநிலத்தில் 2015 மெ வாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்தவர்.
இவரை ஒத்த சித்தாந்தப் பிடிப்புடைய இன்னொரு அரசியல்வாதி அருண்சௌரி. இவரும் மாடன்பிரட் நிறுவனத்தை 106 கோடிக்கு ஹிந்துஸதான் லீவர் நிறுவனத்திற்கு விற்றார். ஆனால் அதன் சொத்து மதிப்பு 2200 கோடி. 5500 கோடி மதிப்புள்ள பால்கோ நிறுவனத்தை வெறும் 551 கோடிக்கு ஸடெரிலைட் நிறுவனத்திற்கு விற்றார். கஜானாவில் 5000 கோடியை வைத்து விஎஸஎன்எல் நிறுவனத்தை 1400 கோடிக்கு டாடாவிடம் விற்றார். மும்பை விமான நிலைய சென்டூர் ஹோட்டலை பாத்ரா என்பவருக்கு 83 கோடிக்கு விற்றார். அவர் அடுத்தமாதம் அதை 115 கோடிக்கு இன்னொருவரிடம் விற்றார். இதிலெல்லாம் ஊழல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், இதற்கு மூலகாரணமான தனியார்மய சித்தாந்தம் என்பதே இங்கு முக்கியமானது. இதற்கு பிள்ளையார் சுழி என்ரான் ஒப்பந்தம் மூலமாக போடப்பட்டது. என்ரான் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.
September 12, 2007
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்யும் அரசியல்:
படுபாதகமான விளைவை இந்தியமக்கள் மீது ஏற்படுத்தப்போகும் இந்திய - அமெரிக்க 123 ஒப்பந்தத்தை இந்திய மக்களிடம் சாதுர்யமாக விற்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நமது வெளிநாட்டு கொள்கையின் சுயசார்பு போய்விடும் என்பது ஒருபுறமிருக்க, அணுசக்தி ஆராய்ச்சியில் நமது முன்னேற்றம் நின்றுபோய்விடும் என்பதும் பல்வேறு துறைகளில் நமக்கு சார்பு நிலை ஏற்படும் என்பதும் இன்னொருபுறமிருக்க,நமக்கு கடுமையான பொருளாதராச் சுமையினை ஏற்படுத்தப் போகும் இலகுநீர் அணுஉலை (Light Water Reactor) ஏற்றுமதிக்காக அமெரிக்க அணுஉலை தயாரிப்பாளர்கள் சப்புக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஒரு என்ரான் அரங்கேறப் போகிறது! என்ரான் அவலத்திலிருந்து இந்தியா தப்பியதற்கு காரணமே இந்தியாவின் அதிர்ஷ்டம் மட்டுமே! ஏனென்றால், என்ரான் நிறுவனம் ஆக்ரோஷத்துடன் இந்தியாவை விழுங்கத் தோளையும் தொடையையும் தட்டி சிலாவரிசை எடுத்து வந்தபோது அதனுடைய உள்நோயால் திடீரென்று மாண்டுவிட்டது. இலகுநீர் அணு உலை இறக்குமதி செய்து இந்தியா போண்டியாகும்போது எதிர்காலத்தில் மீண்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்காது. நாட்டை போண்டியாக்கும் என்ரான் ஒப்பந்தத்தை, நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்ட மான்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இருந்த அதே அதிகாரிகள் படையும் மன்மோகன்சிங் தலைமையில் இருந்த அதே அரசியல்வாதிகள் படையும் இன்று இந்தோ-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகிறது. மக்களின் நினைவாற்றல் மிகக்குறைவு என்ற நப்பாசையிலும், பலவிஷயங்களைக் கொட்டி என்ரான் குளறுபடியை மூடிவிட்டதாக கற்பனை செய்வதனால், மீண்டும் என்ரானை மக்களின் நினைவுக்கு கொண்டுவர ஒரு சில வெளியீடுகளை அடுத்தடுத்து கொண்டுவர சல்லடை முடிவெடுத்திருக்கிறது
Subscribe to:
Posts (Atom)