September 14, 2007

மன்மோகன் சிங்கின் சித்தாந்தப் பிடிப்பு!

உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டாமா?

தவறு செய்தவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் நடந்த தவற்றால் எந்த பாடமும் கற்காதவர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவருடைய அதிகார வர்க்க ஆலோசகர் மான்டேக் சிங் அலுவாலியா. தற்போது 123 ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துவிட்டு, ஆட்சி போனாலும் பரவாயில்லை ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சூளுரைக்கும் மன்மோகன்சிங், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இன்னொரு என்ரான் உருவாகப்போகிறது என்று தெரிந்தேதான் செய்கிறார். ஏனென்றால் என்ரான் ஒப்பந்தத்தின் மூலகர்த்தா இவர்களே!

1000 மெ. வாட் அணு உலையானது 10000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து ஆண்டுக்கு 50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்து வருடத்திற்கு வட்டிம் முதலுமாக 2000 கோடி செலுத்த வேண்டுமானால் ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் மூலதனச் செலவு மட்டுமே ஆகிறது. இதன் பிறகு எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இயக்கச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தால் யூனிட் மின்சாரத்தின் விலை 7 ரூபாய் அடக்கவிலையாகும். மின் இழப்பு, லாபம், இயக்க மூலதன வட்டி, காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்தால் 8 ரூபாய் என்றால் இது கட்டுப்படியாகக் கூடிய விஷயமா? இதுதான் 123 ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் நடக்கப் போகிறது.

இந்தியாவை மொட்டையடிக்க காத்திருக்கும் நிறுவனங்கள்

அமெரிக்காவின் GE நிறுவனம் அல்லது Westinghouse நிறுவனம் தங்களுடைய அணுஉலைகளை வாங்குவதற்கு ஆள்கிடைக்கதாதால் புஷ் அரசை நிர்பந்தப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்து, குறைந்தது 10000 மெ. வாட் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.இவர்கள் மட்டுமல்ல! இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2005-06ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளுக்காக ரூ13,136.72 கோடி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தொகையையும் கபளீகரம் செய்ய இதர அன்னிய அணுசக்தி தளவாட நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

நஷ்டத்தை சிரமேற்கொண்டு ஏற்கும் சித்தாந்த அரசியல்!

அதாவது இந்தியா ஒருலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு அதை இயக்கத் தேவையான எரிபொருளுக்கும் அமெரிக்காவின் தயவுக்காக காத்திருந்து, இயக்கும் தினந்தோறும் நஷ்டத்தை உற்பத்தி செய்து எரிபொருள் தரமுடியாது என்றால் போட்ட முதல் ஒரு லட்சம் கோடியும் வீண் என்ற முடிவை பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் கூட எடுக்க மாட்டார். பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங்கால் மட்டுமே இப்படிப்பட்ட முடிவை எடுக்க முடியும், ஏனென்றால் இது மன்மோகன்சிங்கைப் பொருத்தவரை சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயம். தனியார்மயம், தராளமயம், அன்னிய மூலதனம் இவையே அவரின் குறிக்கோள். இதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை செய்தே தீருவது என்பதே இவரின் சித்தாந்தப் பிடிப்பு. இதே போன்ற முடிவை 1992ம் ஆண்டு என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மராட்டிய மாநிலத்தில் 2015 மெ வாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்தவர்.

இவரை ஒத்த சித்தாந்தப் பிடிப்புடைய இன்னொரு அரசியல்வாதி அருண்சௌரி. இவரும் மாடன்பிரட் நிறுவனத்தை 106 கோடிக்கு ஹிந்துஸதான் லீவர் நிறுவனத்திற்கு விற்றார். ஆனால் அதன் சொத்து மதிப்பு 2200 கோடி. 5500 கோடி மதிப்புள்ள பால்கோ நிறுவனத்தை வெறும் 551 கோடிக்கு ஸடெரிலைட் நிறுவனத்திற்கு விற்றார். கஜானாவில் 5000 கோடியை வைத்து விஎஸஎன்எல் நிறுவனத்தை 1400 கோடிக்கு டாடாவிடம் விற்றார். மும்பை விமான நிலைய சென்டூர் ஹோட்டலை பாத்ரா என்பவருக்கு 83 கோடிக்கு விற்றார். அவர் அடுத்தமாதம் அதை 115 கோடிக்கு இன்னொருவரிடம் விற்றார். இதிலெல்லாம் ஊழல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், இதற்கு மூலகாரணமான தனியார்மய சித்தாந்தம் என்பதே இங்கு முக்கியமானது. இதற்கு பிள்ளையார் சுழி என்ரான் ஒப்பந்தம் மூலமாக போடப்பட்டது. என்ரான் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

1 comment:

cosmo said...

ungal muyarchi parattukku uriyadhu